வியாழன், 5 டிசம்பர், 2019

BSNL நிர்வாகமும், ஒப்பந்தத்தரும், ஒப்பந்த தொழிலாளர்
பிரச்சனையில் தவறு செய்யும் பட்சத்தில் NFTCL தலையீடும் எச்சரிக்கை. புதுவை மாவட்டத்தில் பல ஆண்டுகளாக ஒப்பந்த பணியாளர்காக பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களை, ஒப்பந்தாரர் TENDER இல் இருந்து விலகுவதாக அறிவிப்பு நோட்டீஸ் கொடுத்தால், உடனடியாக நிர்வாகமும், ஒப்பந்த தொழிலாளர்களை வேலையை விட்டு விட்டுக்கனுப்ப முடியாது. நன்றி விசுவாசம் அற்ற நிர்வாகமே உனக்காகத்தானே ஒப்பந்த தொழிலாளி உழைத்தான், உழைப்பு என்றால் சாதாரண உழைப்புயில்லை. காட்டில், மேட்டில், மழையில், குளிரில்,மற்றும் வெட்ட வெயிலில். BSNL நிர்வாகத்தை 10 மாதம் சம்பளம் இல்லாமல் இன்றும் டாய்லட் சுத்தம் செய்து நறுமணம் குறையில்லாமல் பார்த்து கொள்கிறான். கேபிள் JOINDER என்ற  பெயரில் சாக்கடை ,சங்கடத்தையும் அனுபவிக்கும் ஒப்பந்த தொழிலாளி, எல்லோரும் அலுவலகத்தைய வீட்டுக்கு போனாலும் நான் பார்த்துக்ககொள்வேன் என்கிற காவலாளி (EOI ). 

Image may contain: 11 people, people smiling

பாரத் ரத்னா- பாபா சாஹிப் அண்ணல் அம்பேத்கரின் 64 வது நினைவு நாள்- டிசம்பர் 6:
சட்டமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் நினவு தினத்தை முன்னிட்டு டெய்லர்ஸ் ரோடு BSNL ஊழியர்கள் குடியிருப்பு வளாகத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு வழக்கம் போல NFTE-BSNL மற்றும் NFTCL சம்மேளனங்கள் சார்பில் மாநிலத் தலைவர்கள் M.K.ராமசாமி, V.பாபு‌ ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். தோழர் சி.கே.எம் , மாமேதை அம்பேத்கரின் மாண்புகள்- ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக அவரது செயல்பாடுகள்குறித்து புகழஞ்சலி உரை நிகழ்த்துவார். 06-12-2019 ( வெள்ளி) காலை 9.30 மணிக்கு நமது தோழர்கள் பெருந் திரளாக டெய்லர்ஸ் ரோடு BSNL குடியிருப்பு வளாகத்தில் வருகைதர வேண்டுகிறேன்.‌ நன்றி !
தோழமை அன்புடன்
சி.கே.எம்,
மாநிலச் செயலாளர்
NFTE-BSNL
பொதுச் செயலாளர்
NFTCL.

NFTE-BSNL & NFTCL ஆர்ப்பாட்டம் - டிசம்பர் 04:

சென்னை தொலைபேசி தலைமைப் பொது மேலாளர் அலுவலகத்தில் மாநிலத் தலைவர்கள் ராமசாமி, பாபு ஆகியோரின் கூட்டுத் தலைமையில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் இன்று மதிய வேளையில் நடைபெற்றது. ஊதியம் வழங்குவதில் பாரபட்சம் கூடாது; மாத ஊதியத்தை தாமதமின்றி வழங்க வேண்டும்; ஒப்பந்த தொழிலாளர்களின் எட்டு மாத சம்பள பாக்கியை உடனடியாக வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தோழர்கள் G.மகேந்திரன் , சி.கே.எம் . கோஷங்களை முழங்கினர்.‌தோழர்கள் சபாபதி, தனபால் , இளங்கோவன், உள்ளிட்டோர் விளக்கவுரை நிகழ்த்தினர். தோழர் சி.கே.மதிவாணன் கோரிக்கைகளை விரிவாக விளக்கினார். உயரதிகாரிகளான ITS கேடர் அதிகாரிகள் சங்கம் தங்களின் இரண்டு மாத ஊதியம் தாமதமாவது குறித்து டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பின்னர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் பிஎஸ்என்எல் நிர்வாகத்திற்கு எதிராக தொடுத்தது. ஆனால் பிஎஸ்என்எல் நிர்வாகத்தையே நடத்தும் ITS அதிகாரிகள் எட்டு மாதங்களாக வழங்கப்படாத ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதியம் குறித்து சிறிதும் அக்கறை இல்லாமல் இருப்பது படுகேவலம் என தோழர் சி.கே.மதிவாணன் குற்றம் சாட்டினார். அரசு நிறுவனமே ஊழியர்களுக்கு மாத ஊதியம் தராமல் இழுத்தடிக்கும் அநியாயத்தை அவர் கண்டித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான நிரந்தர ஊழியர்களும் ஒப்பந்த தொழிலாளர்களும் பங்கேற்றனர்.

Image may contain: 3 people, including Babu Varadharaj, people standing and outdoorImage may contain: 2 people, outdoor
Image may contain: 17 people, including Babu Varadharaj, Rajendharan You Chidambaram and Kamaraj Sengulathan, people standing and outdoor
Image may contain: 5 people, including இரா.தமிழ் பெருமாள், crowd and outdoor

Image may contain: 17 people, including Sundara Moorthy and இரா.தமிழ் பெருமாள், people smiling, people standing, crowd and outdoor




ITS அதிகாரிகள் இரண்டு மாதங்களாக பிஎஸ்என்எல் நிறுவனத்தால் வழங்கப்படாத சம்பளத்தை உடனடியாக வழங்கக்கோரி நீதிமன்றத்தை அணுகி, இன்று 5 ஆம் தேதிக்குள் சம்பளப் பட்டுவாடா நடைபெற வேண்டும் என்பதை நீதிமன்றத்தில் உத்தரவாக பெற்றுள்ளனர்.நிரந்தர தொழிலாளர் சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து நிரந்தர தொழிலாளிக்கு சம்பள பட்டுவாடா உடனடியாக தரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று 4 ஆம் தேதி அன்று மதிய உணவு இடை ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றனர்.ஆனால் கேட்பாரற்று கிடக்கும் ஒப்பந்தத் தொழிலாளி 10 மாதங்களாக சம்பளத்தை பெறவில்லை இதைப்பற்றி குறைந்தபட்சம் கோரிக்கையை கூட வைக்க எந்த கையாலாகாத சங்கமும் முற்படவில்லை.ஆனால் தொடர்ச்சியாக நமது ஒப்பந்த தொழிலாளர் சலுகைக்காக உரிமைக்காக தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கும் ஒரே சங்கம் NFTCL.ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பள பிரச்சினை குறித்து கோரிக்கை வைத்துப் போராட இன்று 04/12/2019 மதியம் ஒரு மணி அளவில் நமது சங்கத்தின் சார்பாக சென்னை CGM அலுவலகம் முன்பு நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்குவோம்.அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். நிரந்தரத் தொழிலாளி வேறு ஒப்பந்தத் தொழிலாளி வேறு என்பதை பாரபட்சமில்லாமல் 2 தொழிலாளி வர்க்கத்திற்கும் போராடக்கூடிய சங்கம் என அணிதிரள்வோம் வாரீர் !!!வாரீர்!!!

சனி, 30 நவம்பர், 2019

            தேசிய தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சம்மேளனம்                                     தமிழ்நாடு மாநில சங்கம்                                      பதிவு எண் : 3550/ CNI

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மாநிலச் செயற்குழு கூட்டம்                                               நாள் : 30/12/2019.
இடம் :ஜீவஜோதி ஹால், மைக்கேல் ஸ்கூல் பின்புறம், குட் ஷெட் ரோடு, கோவை-18.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அருமைத் தோழர்களே !

நமது NFTCL சம்மேளனத்தின் தமிழ்நாடு மாநிலச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் எதிர்வரும் டிசம்பர் 30 -ந் தேதி (திங்கட்கிழமை ) காலை 10 மணியளவில் கோயமுத்தூரில் நடைபெற உள்ளது. இன்றைய சூழலில் நமது NFTCL சம்மேளனத்தை மேலும் வலுப்படுத்த - விரிவுபடுத்த வேண்டிய கடமை நம்முன் உள்ளது. எனவே அனைத்து மாநிலச் சங்க நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் தவறாமல் முக்கியமான இந்த கூட்டத்தில் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தலைமை : தோழர்.V. பாபு மாநில தலைவர்
முன்னிலை: தோழர் N.இராமகிருஷ்ணன் மாநில செயல் தலைவர்
அஞ்சலி : தோழர் N. அன்பழகன் மாநில துணைத் தலைவர் .‌
வரவேற்புறை: K.ஜெயச்சந்திரன் மாவட்ட செயலாளர் -கோவை
அறிமுக உரை : தோழர் S.ஆனந்தன் மாநிலச் செயலாளர். துவக்க உரை: தோழர் L. சுப்பராயன். அகில இந்திய உதவிப் பொதுச் செயலாளர்
**********************
சிறப்புரை : தோழர் C.K. மதிவாணன் சம்மேளன பொதுச் செயலாளர்.
**********************
ஆய்படுபொருள் :
----------------------------
(1) செயல்பாட்டு அறிக்கை.
(2) சம்பள பிரச்சனை
(3) ஆட்குறைப்பு ஆளெடுப்பு
(4) நிதிநிலை அறிக்கை
(5) மாநில மாநாடு
(6) செயற்குழு தீர்மானங்கள் . (7) பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புத்தாக்க திட்டம்- நமது அணுகுமுறை.
இன்ன பிற தலைவர் அனுமதியுடன் ...
**********************
நன்றியுரை : தோழர் E.சம்பத் மாநில பொருளாளர் .
**********************
கோயம்புத்தூர் வருவதற்கான பயணத்திற்கு இப்போதே முன்பதிவு செய்து கொள்ள வேண்டுகிறேன்.
தோழமையுடன்
S.ஆனந்தன்
மாநிலச் செயலாளர்
தமிழ்நாடு மாநில சங்கம்

ஞாயிறு, 3 நவம்பர், 2019

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று ...ஏற்றிவிட்ட ஏணியை எட்டி தள்ள நினைக்கலாமா ? கூட்டி வைத்து ஓட்டு வாங்கி தனிக்குடித்தன கூட்டாஞ்சோறு ஆக்கலாமா ? ஓட்டு வாங்க C.சிங்,பொதுச் செயலாளர் C.K.மதிவாணன் மூத்த அகில இந்திய துணைத் தலைவர் வேண்டும்.ஓட்டு வாங்கிய பின்னர் ஏன் ஏறினாய் முருங்கைமரம் மீண்டும்.

ஒரு ஓட்டு கூட உன் சங்கத்திற்கு வாங்கி கொடுக்க முடியாதவர்கள் பெயர் எல்லாம் பட்டியலே இருக்கிறது. ஓட்டு கேட்டு ஓடோடி வந்த தோழன் பெயரை நீக்கிவிட்டு நடத்துவதாக வெற்றிவிழா .தலைவன் கட்டளையிட்டு இருந்தால் தமிழகமே மட்டையாகி ஆகியிருக்கும்.சொல்லிப் பார்த்தோம் நாய் வாலை நிமிர்த்த முடியாது என்று, அது நாய்வால் அப்படித்தான் இருக்கும் என்று எங்களுக்கு அறிவுரை சொன்னார். கடந்தகால வரலாற்றை மட்டும் எழுதத் தெரிந்த உங்களுக்கு நிகழ்கால தொழிற்சங்க நடைமுறைகளை பற்றி எழுத தெரியவில்லை.ஏனென்றால் தொழிற்சங்கம் உங்களோடு இல்லை. உங்களை நம்பி இருந்த தொழிலாளர்கள் உங்களிடம் இல்லை.பேருக்கு சங்கம் நடத்தி ஒவ்வொரு ஊருக்கும் உங்கள் கோஷ்டி கூட்டமே நடந்தேறி வருகிறது.அதில் இது ஒரு விழா .ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் இருவேறு பிரிவுகள் இருப்பது தெரிந்தும் இன்றும் மாநில சங்கம் ஒரு நிலைப்பாட்டினை எடுத்து வருகிறது என்றாள் ஏன் இந்தக் கூட்டத்தில் நமது சங்க தோழர்கள் கலந்துகொண்டு வேண்டும் என்ற வினா எழுகிறது ? எப்படியும் விருப்ப ஓய்வு திட்டத்திற்குப் பின் தமிழ்நாடும் சென்னையும் இணைக்கப் போகிறார்கள் என்பதை யாரும் தவிர்க்க முடியாது.விதி வலியது யாரும் வெல்ல முடியாதுநாளை நமதே!!! எந்த நாளும் நமதே !!!தோழமையுடன்S.ஆனந்தன் மாநிலச் செயலாளர்தேசிய தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சம்மேளனம்-தமிழ்நாடு.

வெள்ளி, 1 நவம்பர், 2019

அருமை அருமை பட்டுக்கோட்டையார் வரிகள் என்றும் தொழிலாளர் வர்க்கத்திற்கு ஏற்ற வரிகளாக அமையும் என்பதில் எடுத்துகாட்டு இதோ இந்த பாடல் வரிகளில் ஒப்பந்த தொழிலாளர்களே சிந்திக்க வேண்டிய விஷயம் உங்களிடத்தில், போன மாதமே வேலையில் விட்டு போ என்ற அதிகாரிகள் உங்களை இதுவரையில் வேலைக்கு வைத்து இருக்க செய்த ஒரே சங்கம் தேசிய தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சம்மெளனம்(NFTCL ) இனியும் வேலைதான் முக்கியம் என்று பயத்தில் இருந்தால் உங்களை காப்பாற்ற எந்த சங்கத்தாலும் முடியாது 

சும்மா கிடந்த நிலத்தை கொத்தி
சோம்பல் இல்லாம ஏர் நடத்தி
கம்மா கரையை ஒசத்தி கட்டி
கரும்பு கொல்லையில் வாய்க்கால் வெட்டி
சம்பா பயிரை பறிச்சு நட்டு
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
நெல்லு விளஞ்சிருக்கு வரப்பும் உள்ள மறஞ்சிருக்கு
நெல்லு விளஞ்சிருக்கு வரப்பும் உள்ள மறஞ்சிருக்கு
அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலும் தானே மிச்சம்
கையும் காலும் தானே மிச்சம்
காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
கையும் காலுந்தானே மிச்சம்
இப்போ காடு விளையட்டும் பொண்ணே
நமக்கு காலமிருக்குது பின்னே
காலமிருக்குது பின்னே
காடு விளையட்டும் பொண்ணே
நமக்கு காலமிருக்குது பின்னே
காலமிருக்குது பின்னே
மண்ணை பொளந்து சொரங்கம் வச்சு
பொன்னை எடுக்க கனிகள் வெட்டி
மதிலு வச்சு மாளிகை கட்டி
கடலில் மூழ்கி முத்தை எடுக்கும்
வழிகாட்டி மரமான தொழிலாளர் வாழ்க்கையிலே
பட்ட துயரினி மாறும் -
ரொம்ப கிட்ட நெருங்குது நேரம்
அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
கையும் காலுந்தானே மிச்சம்
காடு விளயட்டும் பொண்ணே
நமக்கு காலம் இருக்குது பின்னே
நமக்கு காலம் இருக்குது பின்னே
மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே -
பசி வந்திடக்காரணம் என்ன மச்சான்
அவன் தேடிய செல்வங்கள் வேறு இடத்திலே
சேர்வதினால் வரும் தொல்லையடி
பஞ்ச பரம்பரை வாழ்வதற்கே இனி
பண்ண வேண்டியது என்ன மச்சான்
தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது
சிந்திச்சு முன்னேற வேணுமடி
வாடிக்கையாய் வரும் துன்பங்களை
இன்னும் நீடிக்கச் செய்வது மோசமன்றோ
இருள் மூடிக் கிடந்த மனமும் வெளுத்தது
சேரிக்கும் இன்பம் திரும்புமடி - இனி
சேரிக்கும் இன்பம் திரும்புமடி
நல்லவர் ஒன்றாய் இணைந்துவிட்டால்
மீதம் உள்ளவரின் நிலை என்ன மச்சான்
நாளை வருவதை எண்ணி எண்ணி
அவர் நாழிக்கு நாழி தெளிவாரடி
அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
கையும் காலுந்தானே மிச்சம்
நானே போடப்போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
படம்: நாடோடி மன்னன்
இசை: S.M.சுப்பையா நாயுடு
பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாடியவர்கள்: T.M.சௌந்தரராஜன் & பானுமதி

சனி, 26 அக்டோபர், 2019

உற்சாகம் இல்லாத தீபாவளி ..No photo description available.
பிஎஸ்என்எல்-ல் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த ஒன்பது மாதங்களாக சம்பளம் வழங்காமல் இழுத்தடிக்கும் நிர்வாகம் இந்த தீபாவளியை அவர்கள் வாழ்வில் கருப்பு தீபாவளியாக ஆகிவிட்டது.9 மாத காலமாக சம்பளம் தராவிட்டாலும் தங்கு தடையின்றி தங்களது பணிகளை செம்மையாக வருத்தத்தோடு செய்தாலும் நிறுவன வளர்ச்சியில் தங்கள் பங்கை செலுத்திக் கொண்டே தான் வருகின்றனர் என்பது வேதனைக்குரிய விஷயம். இதனைக் கண்டித்து நமது சங்கத்தின் மூலமாக பல்வேறு கட்ட சட்ட நடவடிக்கைகளையும் போராட்டங்களையும் சலிக்காது செய்து கொண்டேதான் இருக்கிறோம். இருப்பினும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலைதான். இந்த சட்டப் போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் விதத்தில் தொழிலாளர் நலத்துறை துறை ஆணையரும்(CLC- புதுடெல்லி ) அவர்களை சந்தித்து புகார் மனு கொடுத்த நமது பொதுச்செயலாளரும் பல்வேறு வழிகளின் மூலமாக முயற்சி மேற்கொண்டு வருகிறார் ,தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் (Dy.CLC)அவர்களிடம் புகார் கொடுத்த நமது மாநில சங்கம் என்ற நீண்ட பட்டியலில் . உதவியாக அந்த வழக்கை விசாரித்த நமது தொழிலாளர் நலத்துறை மண்டல ஆணையர் (RLC) அவர்கள் தலையீட்டின் பெயரால் தீபாவளிக்குள் மூன்று மாத சம்பளம் உடனடியாக பட்டுவாடா செய்யப்படும் என்பதை உறுதியாக நமது சங்கம் நம்பியிருந்தது. ஆனால் கருங்காலிகள் யாரோ கார்ப்பரேட் அலுவலகத்தில், ஒரு மாநிலத்திற்கு இதுபோன்று நீங்கள் செய்து விட்டால் மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற வழக்குகளை நீங்கள் சந்திக்க நேரிடும் ஆகையால் தமிழ்நாட்டிற்கும் சென்னைக்கு மட்டும் 3 மாத சம்பளப் பட்டுவாடா நடைபெற கூடாது என்று நடக்கவிருந்த சம்பள பட்டுவாடாவை நிறுத்தி வைத்ததாக தகவல்கள் கசிகின்றன. அதைப்பற்றி நமது மாநில சங்கம் எந்தவிதத்திலும் கவலையடைய போவதில்லை நமது முயற்சிகளை தொடர்ச்சியாக நம்பிக்கையோடு சந்திப்போம். நம்பிக்கை வீண்போகாது வருகின்ற 13 ஆம் தேதி அடுத்தகட்டமாக இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்குள் ஒரு நல்ல முடிவு ஒப்பந்த ஊழியர்களின் சம்பள பிரச்சனையில் ஏற்படும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. இதற்கிடையில் நிரந்தர ஊழியர்களை VRS என்ற பெயரில் வீட்டுக்கு அனுப்ப நிர்வாகம் திட்டம் தீட்டி அதற்குண்டான ஏற்பாடுகளை முழுவீச்சில் செயல்படுத்திக் கொண்டு வருகிறது.ஒப்பந்த ஊழியர்களை ஒருபுறம் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறும் அதே நிர்வாகம் தான் நிரந்தர ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று பல திட்டங்களைத் தீட்டி, இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு, Land Line இணைப்புகளை பராமரிக்க ஆள் இல்லை என்று கூறி இந்த நிறுவனத்தை முடக்கி தனியாருக்கு கைமாற்றி விட கச்சைகட்டி கொண்டிருக்கிறது என்பது தகவல். ஊழியர்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்ய ,வேஷம் போடும் மோடி அரசாங்கம்,தனியார் நிறுவனங்களுக்கு BSNL தாரை வார்த்து அதன் சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்டுள்ளது. வருங்கால சந்ததியினருக்கு இந்த நிறுவனத்தில் பணியாற்றுவது என்பது மிகப்பெரிய சவாலாக தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.VRS கொடுத்ததற்கு பின் அந்த காலியிடங்களுக்கு மாற்றாக ஒப்பந்த ஊழியர்களை வைத்து தான் இந்த நிறுவனத்தையே நடத்த வேண்டும் என்ற நிலை கூடிய விரைவில் நம் முன்னே நடக்கவிருக்கிறது .பொருத்தது பொருத்தம் பொங்கி எழ வேண்டிய இடத்தில் எழுவோம்.மனிதாபிமானத்தோடு நமது அதிகாரிகளும் ஊழியர்களும் அவர்களால் இயன்ற உதவிகளை அனைத்து அலுவலகங்களில் செய்திருப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கின்றன.தந்த பொருள் சிறிதானாலும் தருகின்ற மனங்களை வாழ்த்துவோம்.என்னோடு பணிபுரியும் சக தொழிலாளியான, என் ஒப்பந்த தொழிலாளி தோழன் நாளை தீபாவளி கொண்டாடாமல் இருக்கக் கூடாது என்று கரிசனத்தோடு தங்களால் இயன்ற உதவிகளை நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவித்துக்கொண்டு
நாளை நமதே!!
எந்த நாளும் நமதே!!! மிகப்பெரிய வேதனையோடு போராடிக்கொண்டே இருக்கிறாய் என்றால் மிகப்பெரிய சாதனையை செய்யப்போகிறாய் என்று கூறுவார்கள் அதுபோல இன்றைய துக்கம் நாளை கண்டிப்பாக சந்தோசமாய் மாறும் ...நம்பிக்கையோடு பயணிப்போம் .
தோழமையுடன்
எஸ் ஆனந்தன் மாநிலச்செயலாளர்
தேசிய தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சம்மேளனம்- தமிழ்நாடு .

Spontaneous demonstration against the unjustified outbursts of CMD / BSNL on 26-10-19 at Chennai.:

To record our strong protest immediately to the harsh speech of Shri.P.K. Purwar , both NFTE-BSNL in Chennai Telephones Circle and NFTCL, Tamilnadu jointly held a Spontaneous demonstration at Flower Bazaar complex within very short notice. Despite tomorrow is Deepawali hundreds of our comrades including dozen Contract Labourers thronged the Flower Bazaar complex by 4 pm. The protest Demonstration/ meeting was jointly presided over by Circle President Ramaswamy and State President Babu. Slogans condemning the CMD were raised by comrades Mahendran and CKM. Thereafter NUBSNLW (FNTO ) National Working President and Circle Secretary S.Lingamurthy and Comrade CKM spoke eloberately on the meetings with CMD yesterday & DOT Secretary today. Comrade CKM condemned the threatening and harsh speech of Shri. Puruwar, CMD who is deliberately trying to convert the VRS announced by the government into CRS by forcing all those employees who have completed the age of 50 years to avail the VRS and go home. His tenure in MTNL saw that company going from bad to worst. Hence he has no moral authority to criticize the employees of BSNL who kept the company afloat despite severe difficulties. His language was very rude and not suitable for the post he holds. Further his threat that if the required number of employees are not go out availing VRS , the reduction of retirement age will be implemented is utterly nonsense. He may not be aware of the fact that the BSNL employees receive their pension from government fund and hence unless the retirement age for Central Government employees is revised/ modified there is no legal option for any one to alter the retirement age of BSNL employees alone which will be a pure discrimination. Com.CKM assured the gathering that if CMD acts in madness then union will approach the court . He urged the management to effect immediate payment of wages to the Contract Labourers which is pending for almost six months. Circle Treasurer C.Ravi proposed vote of thanks.

வியாழன், 24 அக்டோபர், 2019

 At Chennai Valluvar kottam area the Tamilnadu State-" SAVE BSNL FORUM " 
held a massive Dharna on 24/10/19 . Forum President R.R.Balasubramanian( AIBSNLOA) presided . State Co-ordinator C.K.Mathivanan(NFTE- BSNL), State Working President S.Lingmurthy ( FNTO), State Dy.Coordinators J.Vijayakumar ( TEPU),. P.Shanmugam( TN Circle NFTE- BSNL),Comrades V.Babu( NFTCL), State Asst.Treasurer S. Loganathan ( SEWA-BSNL), State Vice-President K.Arumugam( PEWA-BSNL), Suresh ( T.N.Circle AIBSNLOA) and others took part and spoke. More than 250 Comrades of all unions and associations enthusiastically participated. Slogans were effectively shouted by Com.G.Mahendran, Circle Vice-president of NFTE-BSNL .
The unanimous opinion of the SBF was expressed in this Dharna which appreciated and thanked the Government of India for announcing a revival package putting an end to all sorts of rumours and false campaign against BSNL. It also demanded the allocation of 5G to BSNL as and when it is allocated to private telcos.The forum insisted that the government of India pay its dues to BSNL which is approximately rupees 6800 crores immediately. It also appealed to the Government to reduce the price of 4G Spectrum at the rate very much lower than the 2016 auction bid price as four years have already passed. Further the Forum leaders urged the government to implement the earlier assurances given to the employees of DTS on the eve of Corporatisation by the then Vajpayee Government which were subsequently approved by the Union Government's Cabinet.
The Forum expressed its anguish on the unfolding scenerio in the aftermath of "attractive" VRS . As large number of staff may avail the irresistable Offer on VRS the services will be left unmanned at all places as now itself BSNL is experiencing acute staff shortage sue to retirement and deaths. At the end the Dharna resolved to approach the Prime Minister with a request to attend the left out issues.

செவ்வாய், 22 அக்டோபர், 2019


RLC அவர்களின் தலையீடு மிகுந்த மகிழ்ச்சியை ஊழியர்கள் மத்தியில் நிர்வாகத்திலும் ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.

மூன்று மாத சம்பளம் தீபாவளிக்குள் பட்டுவாடா செய்ய வேண்டும் ஆட்குறைப்பு பிரச்சினையைப் பொருத்த வரையில் யாரையும் வீட்டுக்கு அனுப்ப சட்டரீதியான முகாந்திரம் இல்லை என்பதை வலியுறுத்தியும் ஒப்பந்த ஊழியர்களின் சம்பள பிரச்சனை தீர்வுக்கு கொண்டுவர கார்ப்பரேட் அலுவலகத்தில் இருந்து அதை முடிவு செய்ய கூடிய வல்லமை பொருந்திய அதிகாரி நேரடியாக பேச்சுவார்த்தைக்கு அடுத்த கூட்டத்திற்கு அழைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை தொழிலாளர் துறை மண்டல ஆணையர் மதிப்பிற்குரிய அண்ணாதுரை அவர்கள் உத்தரவிட்டார்.இதனை ஏற்றுக் கொண்ட BSNL நிர்வாகம் கார்ப்பரேட் அலுவலகத்திற்கு முறையாக இன்று நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை பற்றி அறிவிப்பதாக வும் அதற்குண்டான முயற்சிகளை மேற்கொள்ளும் என்பதை உறுதி அளித்தனர்.ஒப்பந்த ஊழியர்களின் சம்பள பிரச்சனையை அறிந்த தொழிலாளர் துறை மண்டல அதிகாரி அண்ணாதுரை அவர்கள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண உடனடியான ஏற்பாடுகளை செய்து, நமது அலுவலகத்திற்கு வந்து இந்தப் பிரச்சினை குறித்து விவாதித்து ஒரு நல்ல தீர்வினை எட்ட செய்த Regional Labour Commissioner அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் நமது மாநில சங்கத்தின் சார்பாக நன்றி பாராட்டுகிறோம் . தொழிலாளர்கள் 9 மாத காலமாக சம்பளம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் உணர்வினை எடுத்துரைத்த அதிகாரியை பார்க்கையில் இவர் அதிகாரியா ? இல்லை தொழிலாளி வர்கத்தின் போர்வாள் என்று நினைக்கத் தோன்றியது. RLC அவர்களின் தலையீடு மிகுந்த மகிழ்ச்சியை ஊழியர்கள் மத்தியில் நிர்வாகத்திலும் ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.



Image may contain: 1 person, sitting and indoor

Image may contain: one or more people, people sitting, basketball court, living room and indoor


சனி, 5 அக்டோபர், 2019

பாவப்பட்ட தொழிலாளி இருபது ஆண்டுகளாக இந்தக் இலாகா முன்னேற்றத்துக்காக பாடுபட்டு விட்டு திடீரென்று வீட்டுக்கு அனுப்பினால் எங்கே செல்வார்.வயது முதிர்வு ஒரு காரணம், வாழ தெரியாது இந்த நிறுவனத்தை நம்பியது ஒரு காரணம். அதிகம் படித்தாலும் வேலை கிடைக்காதது இன்னொரு காரணம் என்று காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் ஆனால் தொழிலாளியை வீட்டிற்கு அனுப்புவது என்பது நமது மனதளவில் நமது மாநில மாவட்ட நிர்வாகத்திற்கும் உடன்பாடில்லை என்ன செய்ய கார்ப்பரேட்டுகளின் அட்டகாசத்தில் ஆட்கொண்டு கொண்டிருக்கும் தொழிலாளி வர்க்கத்தை மீட்டெடுக்க சட்டபூர்வமான போராட்டங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது தொடர்ச்சியாக போராடுவோம் சட்டரீதியாக வென்றெடுப்போம் தொழிலாளி வர்க்கத்தை ஏகபோக முதலாளி வர்க்கத்திடம் இருந்து மீட்டெடுப்போம்.
வாழும் வரை போராடு !!!
ஆம், நமது இலாகாவில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் நிலை இன்று அப்படித்தான் ஆகிவிட்டது. கடந்த எட்டு மாதங்களாக சம்பளம் தராமல் நிதி நெருக்கடியில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நமது நிர்வாகம் நிலைகண்டு தோழர்கள் தங்கள் பணியில் சிறிதளவும் தொய்வின்றி நமது நிறுவனத்துக்காக தொடர்ச்சியாக பணியாற்றி வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இதற்கிடையில் கார்ப்பரேட் அலுவலகத்திலிருந்து பல்வேறு உத்தரவுகள், ஒப்பந்த ஊழியர்களை குறைக்க சொல்லி வந்த மயம் இருப்பது நாம் அறிந்ததே. பணிபுரியும் தொழிலாளிக்கு சம்பளமும் இல்லை அவனை வீட்டுக்கு அனுப்புவதும் ஞாயமில்லை வாதத்தை ஏற்க மறுத்து சம்பளம் கொடு ஆள விடு என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் வருத்தத்துக்குரிய நிலையை நமது சங்கத்தின் சார்பாக மண்டல தொழிலாளர் ஆணையரிடம் முறையிட்டோம். நிர்வாகத்தின் நியாயத்தை அதிகாரிகள் விளக்கினர்.நமது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மண்டல தொழிலாளர் துறை ஆணையர் -RLC , 8 மாத சம்பளத்தை வழங்கும் வரை அந்தத் தொழிலாளர்கள் பிரச்சினையில் நிர்வாகம் தலையிடுவது என்பது சட்டபூர்வமாக தவறு என்பதை உணர்த்தினார்.அதுமட்டுமல்லாமல் சம்பள பாக்கி தரும்வரை இன்றைய நிலை எப்படி இருக்கிறதோ, அதுவே தொடர வேண்டும்(Status -CO). வழக்கு விசாரணை இருக்கும்வரை ஒப்பந்த தொழிலாளர்கள் குறைப்பதோ அவர்கள் பணி நேரங்களை குறைப்பதோ பணி மாறுதல்கள் செய்வதோ கூடாது என்பதையும் வலியுறுத்தி உத்தரவிட்டார் .இந்த உத்தரவின் மூலம் இன்று 1 10 2019 முதல் பணி நீக்கம் செய்யப்பட்ட 600க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் வாழ்வில் ஒளியேற்றி இருக்கிறோம் என்றால் அது மிகையாகாது இந்த உத்தரவை அடுத்து மாநில நிர்வாகம் அனைத்து மாவட்டங்களிலும் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை நிறுத்தச் சொல்லி நடவடிக்கை எடுத்திருப்பது உண்மையாகவே சந்தோஷம் அளிக்கிறது.முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் தற்சமயம் இந்த பிரச்சனையில் ஒரு நல்லதொரு முடிவை எட்ட செய்த மண்டல தொழிலாளர் நல ஆணையர் அவர்களுக்கும், மாநில நிர்வாகத்திற்கு நமது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம். அக்டோபர் 1ஆம் தேதி முதல் பணிக்கு வர வேண்டாம் என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பிய நிர்வாகத்தை அக்டோபர் 4ஆம் தேதியே பணிக்கு வாருங்கள் என்றழைக்க வைத்த பெருமை நமது சங்கத்தையே சாரும் என்றால் அது மிகையாகாது.தொடர்ச்சியான போராட்டங்களை நடத்துவோம் சட்டபூர்வமான நடவடிக்கையில் இறங்குவோம் தேவைப்பட்டால் அகில இந்திய முழுவதும் நிலவி வரும் இந்த பிரச்சனை குறித்து நமது சம்மேளனத்தின் சார்பாக வழக்குத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வலியுறுத்துவோம்.
தோழமையுடன்
S.ஆனந்தன் மாநிலச் செயலாளர்
தேசிய தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சம்மேளனம் -தமிழ்நாடு.
சாதிவெறி கொண்ட தமிழ்நாடு BSNLEU சங்கத்திற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்:
தேசப் பிதாவின் 150 வது பிறந்தநாளான 02-10-19 அன்று அண்ணா சாலை வளாகத்தில் தீண்டாமை ஒழிப்பு தொழிலாளர் கூட்டணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுமுறை நாளிலும் 300 க்கும் மேற்பட்ட தோழர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். NFTE-BSNL, TEPU, SEWA- BSNL, NFTCL சங்க நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் பெருமளவில் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் சி.கே.எம். ; பி.என்.பெருமாள், சுப்பராயன், விஜயகுமார், ஆனந்தன், இளங்கோவன், லோகநாதன், பலராமன், பாபு, முருகையன், நாகராஜன் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர். முன்னதாக தோழர்கள் விஜயகுமார், ஆனந்தன் இணைந்து காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Image may contain: 3 people, including PN Perumal, people smiling, people standing

நேற்று நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் நமது சங்க நிர்வாகிகளும் அதிகாரிகளும் கலந்துகொண்டு கருத்துப் பரிமாற்றத்தில் விளைவாக ஒருமனதாக கையெழுத்திட்ட உடன்படிக்கை இந்த அறிக்கையில் மதிப்பிற்குரிய தொழிலாளர் நலத்துறை ஆணையர் அவர்கள் இந்த வழக்கை 21ஆம் தேதி ஒத்தி வைப்பதாகவும் அதுவரையில் எந்த ஒரு ஒப்பந்த தொழிலாளியும் பணியில் இருந்து நீக்கக் கூடாது என்று தடை உத்தரவு பிறப்பித்தார்.இதனை ஏற்றுக்கொண்ட சென்னை தொலைபேசி அதிகாரிகளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளும் இதுகுறித்து அனைத்து மட்டங்களிலும் அறிவிப்போம் என்று உறுதி கூறினார்.வரும் 21 ஆம் தேதி அன்று சென்னை தொலைபேசி மாநிலத்தில் உள்ள கான்பிரன்ஸ் ஹாலில் தமிழகம் மற்றும் சென்னை டெண்டர் எடுத்துள்ள அனைத்து ஒப்பந்ததாரர்கள், தொழிற்சங்க வாதிகளும் முத்தரப்பு பேச்சுவார்த்தையை தொழிலாளர் துறை மண்டல ஆணையர் முன்னிலையில் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது.ஆகவே மாவட்ட சங்க நிர்வாகிகள் அனைவரும் ஒப்பந்ததாரர் பெயர், விலாசம் மற்றும் அவர் எந்தப் பணிக்காக டெண்டர் எடுத்துள்ளார் எத்தனை பேர்கள் அவரிடம் வேலை செய்கிறார்கள் என்ற விவரங்களை உடனடியாக மாநில சங்கத்திற்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.


No photo description available..





No photo description available.
No photo description available.
No photo description available.