சென்னை தொலைபேசி தலைமைப் பொது மேலாளர் அலுவலகத்தில் மாநிலத் தலைவர்கள் ராமசாமி, பாபு ஆகியோரின் கூட்டுத் தலைமையில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் இன்று மதிய வேளையில் நடைபெற்றது. ஊதியம் வழங்குவதில் பாரபட்சம் கூடாது; மாத ஊதியத்தை தாமதமின்றி வழங்க வேண்டும்; ஒப்பந்த தொழிலாளர்களின் எட்டு மாத சம்பள பாக்கியை உடனடியாக வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தோழர்கள் G.மகேந்திரன் , சி.கே.எம் . கோஷங்களை முழங்கினர்.தோழர்கள் சபாபதி, தனபால் , இளங்கோவன், உள்ளிட்டோர் விளக்கவுரை நிகழ்த்தினர். தோழர் சி.கே.மதிவாணன் கோரிக்கைகளை விரிவாக விளக்கினார். உயரதிகாரிகளான ITS கேடர் அதிகாரிகள் சங்கம் தங்களின் இரண்டு மாத ஊதியம் தாமதமாவது குறித்து டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பின்னர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் பிஎஸ்என்எல் நிர்வாகத்திற்கு எதிராக தொடுத்தது. ஆனால் பிஎஸ்என்எல் நிர்வாகத்தையே நடத்தும் ITS அதிகாரிகள் எட்டு மாதங்களாக வழங்கப்படாத ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதியம் குறித்து சிறிதும் அக்கறை இல்லாமல் இருப்பது படுகேவலம் என தோழர் சி.கே.மதிவாணன் குற்றம் சாட்டினார். அரசு நிறுவனமே ஊழியர்களுக்கு மாத ஊதியம் தராமல் இழுத்தடிக்கும் அநியாயத்தை அவர் கண்டித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான நிரந்தர ஊழியர்களும் ஒப்பந்த தொழிலாளர்களும் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக