வியாழன், 5 டிசம்பர், 2019

ITS அதிகாரிகள் இரண்டு மாதங்களாக பிஎஸ்என்எல் நிறுவனத்தால் வழங்கப்படாத சம்பளத்தை உடனடியாக வழங்கக்கோரி நீதிமன்றத்தை அணுகி, இன்று 5 ஆம் தேதிக்குள் சம்பளப் பட்டுவாடா நடைபெற வேண்டும் என்பதை நீதிமன்றத்தில் உத்தரவாக பெற்றுள்ளனர்.நிரந்தர தொழிலாளர் சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து நிரந்தர தொழிலாளிக்கு சம்பள பட்டுவாடா உடனடியாக தரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று 4 ஆம் தேதி அன்று மதிய உணவு இடை ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றனர்.ஆனால் கேட்பாரற்று கிடக்கும் ஒப்பந்தத் தொழிலாளி 10 மாதங்களாக சம்பளத்தை பெறவில்லை இதைப்பற்றி குறைந்தபட்சம் கோரிக்கையை கூட வைக்க எந்த கையாலாகாத சங்கமும் முற்படவில்லை.ஆனால் தொடர்ச்சியாக நமது ஒப்பந்த தொழிலாளர் சலுகைக்காக உரிமைக்காக தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கும் ஒரே சங்கம் NFTCL.ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பள பிரச்சினை குறித்து கோரிக்கை வைத்துப் போராட இன்று 04/12/2019 மதியம் ஒரு மணி அளவில் நமது சங்கத்தின் சார்பாக சென்னை CGM அலுவலகம் முன்பு நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்குவோம்.அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். நிரந்தரத் தொழிலாளி வேறு ஒப்பந்தத் தொழிலாளி வேறு என்பதை பாரபட்சமில்லாமல் 2 தொழிலாளி வர்க்கத்திற்கும் போராடக்கூடிய சங்கம் என அணிதிரள்வோம் வாரீர் !!!வாரீர்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக