வியாழன், 30 ஆகஸ்ட், 2018
NFTCL திருச்சி மாவட்ட செயலர் தோழர்கள் மில்டன் & தோழர் .ஹென்றி மாநில அமைப்பு செயலர் ஆகியோர் இல்லத் திருமணத்தில்
நமது பொது செயலர் தோழர் C .K .M , தோழர் சுப்பாரயன் சம்மேளன துணை தலைவர் ,சங்க முன்னோடிகள் தோழர் காமராஜ் , தோழர் பாலகுரு மற்றும் நமது மாநில ,மாவட்ட சங்க நிர்வாகிகள் என்று பலரும் பங்கேற்று வாழ்த்தினர். மணமக்களை வழிய வழிய வாழியவே என்று மனதார மாநில சங்கம் வாழ்த்துகிறது .
நமது பொது செயலர் தோழர் C .K .M , தோழர் சுப்பாரயன் சம்மேளன துணை தலைவர் ,சங்க முன்னோடிகள் தோழர் காமராஜ் , தோழர் பாலகுரு மற்றும் நமது மாநில ,மாவட்ட சங்க நிர்வாகிகள் என்று பலரும் பங்கேற்று வாழ்த்தினர். மணமக்களை வழிய வழிய வாழியவே என்று மனதார மாநில சங்கம் வாழ்த்துகிறது .
செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018
இன்று மதியம் 2மணியளவில்NFTCL மாநில சங்கத்தின் சார்பாக,மாநில செயலாளர் தோழர் ஆனந்தன் அறிவுறுத்தலின் காரணமாக DyCLC ஜ மாநில தலைவர் தோழர் பாபு,மாநில பொருளாளர் தோழர் சம்பத்,மாநில துணை பொருளாளர்,ரத்தினம், NFTCLதென் சென்னை மாவட்டசெயலாளர் தோழர் தருமன், NFTCL வட சென்னை மாவட்ட செயலாளர் தோழர் கோதண்டபாணி, NFTE வடசென்னை மாவட்டசெயலாளர் தோழர் ஆறுமுகம் ஆகியோர் சந்தித்துப் பேசினோம் .21/8/2018 திருச்சியில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தை பற்றி தெரிவித்தோம், அப்போது Dy.CLC அவர்கள் தமிழகத்தின் CGM , சென்னையில் உள்ள CGM ,அவர்களுக்கு தனித்தனியாக கடிதம் எழுதி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் பிரதி மாதம் 7ம் தேதி வழங்க அறிவுறுத்துவதாக கூறினார்கள்.
நமது தோழர் பிரின்ஸ்.....
தஞ்சை மாவட்டத்தின் தானை தலைவன் நமது NFTCL சங்கத்தின் மாவட்ட தலைவர் .அனைவராலும் போற்றப்படக்கூடிய தோழன், வரும் 31/08/2018 அன்று பணி ஓய்வு பெறுகிறார் .அவர் நமக்காக மட்டுமல்லாமல் அனைத்து சங்க தோழர்களுக்கும் உதவியை பதவி இல்லா காலத்திலே செய்தவர் . ஈடு இணையற்ற தோழனை நமது சங்கத்தின் சார்பாக 27/08/2018 அன்று தஞ்சையில் பாராட்டு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது அனைவரும் வாழ்த்த வாருங்கள்.
தஞ்சை மாவட்டத்தின் தானை தலைவன் நமது NFTCL சங்கத்தின் மாவட்ட தலைவர் .அனைவராலும் போற்றப்படக்கூடிய தோழன், வரும் 31/08/2018 அன்று பணி ஓய்வு பெறுகிறார் .அவர் நமக்காக மட்டுமல்லாமல் அனைத்து சங்க தோழர்களுக்கும் உதவியை பதவி இல்லா காலத்திலே செய்தவர் . ஈடு இணையற்ற தோழனை நமது சங்கத்தின் சார்பாக 27/08/2018 அன்று தஞ்சையில் பாராட்டு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது அனைவரும் வாழ்த்த வாருங்கள்.
மாதாமாதம் இந்த நிலையில்தான் உள்ளனர் பிஎஸ்என்எல் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஜூலை மாத சம்பள பட்டுவாடா இதுவரையில் எந்த மாவட்டத்தில் நடைபெறவில்லை நிர்வாக தரப்பை கேட்டால் Fund வரவில்லை என்கிறார்கள்.காண்ட்ராக்ட் எடுத்து ஒப்பந்ததாரரை கேட்டால் Bill sanction ஆகவில்லை என்கிறார்கள் மொத்தத்தில் இந்தத் துறையில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிலை நீங்கள் கீழே பார்க்கும் புகைப்படத்தை போன்றே உள்ளது. எதுவும் சில காலம் தான் என்பதை நாம் போராட்டமே தீர்மானிக்கும் .
பட்டினிப் போராட்டம்
நேற்று திருச்சி மாநகரில் நடந்த பட்டினிப் போராட்டத்தில் 600க்கும் மேற்பட்ட தோழர் தோழியர்கள்,மற்றும் தமிழகம் முழுதும் திரட்டப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தமிழகம் தழுவிய கூட்டம் திருச்சியை திணறச் செய்தது என்றால் மிகையாகாது. பட்டினிப் போராட்டம் துவக்கத்திலேயே நமது சம்மேளன துணைத்தலைவர் தோழர் மாலிஅண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து போராட்டத்தை துவக்கி வைத்தார் இனி முழுக்க கோஷங்களை தோழர் மகேந்திரன் முழங்க இந்தப் போராட்டத்தில் கூட்டுத் தலைமையாக தோழர்கள் வி பாபு மாநிலத் தலைவர் மற்றும் புதுக்கோட்டை முத்து திருச்சி மாவட்ட தலைவரும் தலைமையேற்று நடத்தினர்.இந்த பட்டினிப் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று Y.மில்டன் திருச்சி மாவட்ட செயலாளர் வரவேற்புரை நிகழ்த்தினார் மேலும் AITUC மாவட்டச் செயலாளர் தோழர் மணி அவர்கள் தனக்கே உண்டான பாணியில் அருமையான ஒரு துவக்க உரையை நிகழ்த்தினார் இதைத்தொடர்ந்து பல்வேறு அமைப்புகளின் சார்ந்த தோழர் தோழியர்கள் இந்தப் போராட்டத்தை வாழ்த்தியது என்பது சிறப்பம்சமாகும். தோழர்.திராவிடமணி மாநகர மாவட்ட செயலாளர் சி பி ஐ
தோழர் சுரேஷ் மாவட்ட தலைவர் ஏஐடியுசி தோழர் செல்வராஜ் முன்னாள் நிர்வாக குழு உறுப்பினர் சிபிஐ மற்றும் AIBEA பொதுச் செயலாளர் ராமராஜன் என்று பலரும் போராட்டத்தின் நோக்கம் வெற்றி பெறும் என்று கூறியதும் நமது தோழர்கள் மத்தியில் ஒரு எழுச்சியை உண்டாக்கியது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகைதந்திருந்த தூத்துக்குடி மாவட்டச் செயலர் தோழர் பால கண்ணன் பன்னீர்செல்வம் தோழர் கணேசன் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் தோழியர் பரிமளம் மதுரை கடலூர் அன்பழகன் மஞ்சினி வேதாச்சலம் ரவி மதிவாணன் வடசென்னை மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கோதண்டபாணி தென்சென்னை மாவட்டச் செயலாளர் நாகராஜன் தருமன் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ஏகாம்பரம் மகேந்திரன் தஞ்சாவூர் மாவட்ட தலைவர்கள் தோழர் பிரண்ட்ஸ் இளங்கோவன் பன்னீர் ஆறுமுகம் திருச்சி மாவட்ட தலைவர் சுந்தரம் மற்றும் முன்னாள் சம்மேளன செயலாளர் ராஜசேகரன் என்று NFTE பொறுப்பாளர்கள் என்று பெரிய பட்டியலையே தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய ஆதரவு தெரிவித்தனர் திருவள்ளூர் மாவட்டம் போராட்டத்திற்காக ஒரு பேருந்து அமர்த்தி நூற்றுக்கணக்கான தோழர்கள் திரட்டியது சந்தோஷமான விஷயம். பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் நூற்றுக்கணக்கான தோழர்களை திரட்டிய பொறுப்பாளர்களை அனைவரையும் மாநில சங்கம் பாராட்டுகிறது. அனைத்து உண்ணாவிரதப் பந்தலில் குறிப்பிட்ட தோழர்கள் தோழியர்கள் உண்ணாநிலை என்பது சராசரியாக நடக்கக் கூடிய விஷயம் ஆனால் இந்த பட்டினிப் போராட்டத்தில் வந்திருந்த அனைவரும் பட்டினியாய் போராடியதுதான் நமது சங்கத்திற்கு கிடைத்த வெற்றி இந்தப் போராட்டத்தில் மறக்க முடியாத நிகழ்வு என்றால் தோழர் ஈரோடு மாலி சம்மேளன துணைத் தலைவர் காலையிலிருந்து நம்மோடு பட்டினி கிடந்தது மட்டுமல்ல ஆழ்ந்த சொல்லாடல் கொண்ட அருமையான உரை போராட்டத்தின் உச்சகட்டத்தில் அனைவரையும் ஈர்த்த கண்டன உரை. தோழர் மில்டன் அவர்களின் மகனும் தோழர் ஹென்றி மகளும் இந்த மாதம் 30ஆம் தேதி திருமணத்தை வைத்துக் கொண்டு சிறிதும் தயக்கமின்றி முழுமையாக நமது பட்டினிப் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டது நம்மை வியக்கச் செய்தது . உணர்வுப்பூர்வமான இந்தப் போராட்டத்தை தொழிலாளர் தொழிலாளர் நலத்துறையிடம் புகாராக அளித்துள்ளோம் நமது கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனை செய்வதாகவும் நமது நிர்வாகத்தை அழைத்துப் பேசவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்பதை நம்மிடம் தொழிலாளர் துறை நல ஆணையர் அவர்கள் கூறியது என்பதே நமது போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி மேலும் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் இந்தப் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்பதையும் எச்சரித்துள்ளோம். கூடிய விரைவில் இந்த போராட்டத்திற்கான இலக்கை எட்ட கூடும் என்பதை நம்புகிறோம். போராட்டத்தின் முடிவில் அனைத்து தோழர்களுக்கும் பழச்சாறு கொடுத்து தோழர் ராமராஜன் பொது செயலாளர் வங்கி ஊழியர் சங்கம் முடித்து வைத்தார் . நன்றி உரையாக தோழர் ஆறுமுகம் திருச்சி மாவட்ட பொருளாளர் அவர்கள் அருமையான ஒரு நன்றியுரையினை அனைவரும் மகிழக் கூடிய அளவில் தெரிவித்தார் என்பது சந்தோஷமான விஷயம் . |
.
ஐம்பத்தாறு ஆண்டுகள் வாழ்ந்த ஜீவா தன் வாழ்நாள் முழுவதையும் தமிழ் சமூகத்திற்காகவும், தமிழக நலனுக்காகவும், தொழிலாளி வர்க்கத்திற்காகவும், தேச சுதந்திரத்திற்காகவும் அர்பணித்தவர். தமிழகத்தில் அப்போதைய தேவையான விடுதலை, சுயமரியாதை, சமதர்மம் ஆகியவற்றிற்கு தன் இறுதி மூச்சி வரை போராடியவர் தோழர் ப. ஜீவானந்தம். தன் வாழ்நாளில் நடைபெற்ற அனைத்து புரட்சிகர நடவடிக்கைகளில் எத்துனை எதிர்ப்புகள் வந்தாலும் அவற்றைக் கண்டு தளராமல் இரண்டறக் கலந்தவர் அவர்.
|
மாநில சங்க பொறுப்பாளர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து நாளை நடைபெற இருக்கின்ற பட்டினிப் போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம். வேலை செய்யும் தொழிலாளிக்கு செய்த வேலைக்கான ஊதியம் தர மறுக்கின்றன பிஎஸ்என்எல் நிறுவனத்தை கண்டித்தும், பிரதி மாதம் சம்பளம் ஏழாம் தேதி எந்த ஒரு தொழிலாளிக்கும் கிடைப்பதில்லை அதை தர மறுக்கின்ற ஒப்பந்ததாரரை கண்டித்தோம் , 7000 போனஸ் என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது அதை பெற்று தருவது நமது போராட்டத்தின் லட்சியமாகும். திறமைக்கேற்ற ஊதியம் என்பது உத்தரவாய் மட்டுமே இருக்கிறது அதை நடைமுறைப்படுத்த தொழிலாளர் நல ஆணையமும் முயற்சி எடுக்கவில்லை அதை தர வேண்டிய பிஎஸ்என்எல் நிர்வாகமும் தர மறுக்கிறது இதனை வன்மையாக கண்டித்து ஒரு நாள் பட்டினிப் போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம்
திக்கெட்டும் பரவட்டும் செய்தி !!!
திக்கற்று கிடக்கும் ஒப்பந்ததொழிலாளிக்கு கிடைக்கட்டும் நீதி !!!
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். கண்டன ஆர்ப்பாட்டம் வெகுவிமர்சையாக நான்கு மாவட்டங்களை உள்ளடக்கி CGM அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது கூட்டத்தில் மாநிலத் தலைவர் V. பாபு மாநில பொருளாளர் E.சம்பத் மற்றும் 4 மாவட்ட செயலாளர்களும் மற்றும் மாநில மாவட்ட சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர் . சென்னை மாநில துணைச் செயலாளர் இளங்கோவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். போராடிய தோழர்களுக்கு மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் போராடுபவன் உனக்குத் தோல்வி இல்லை போராட தெரியாத உனக்கு வெற்றி இல்லை என்பதை நிரூபித்த தோழர்களே வாழ்த்துகிறோம் . |
NFTCL Tanjore District demonstration started in front of BSNL office against various demand as per State Executive meeting
மாநிலச் சங்க தீர்மானத்தின்படி கடலூர் மாவட்டத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது இதில் நூற்றுக்கணக்கான ஒப்பந்த ஊழியர்கள் நிரந்தரத் தொழிலாளர்களும் பங்கேற்று சிறப்பித்தனர் தோழர் அரிகிருஷ்ணன் தலைமை தாங்கி மாவட்ட செயலாளர் தோழர் மஞ்சினி கண்டன உரையாற்ற தோழர்கள் பகத்சிங் ரவி வேதாச்சலம் என்று பல தோழர்கள் உரையாற்றினார் மாநில சங்க பொறுப்பாளர் தோழர் அன்பழகன் சிறப்புரை நிகழ்த்தி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார் ஆர்ப்பாட்டம் சிறப்புற நடத்திய கடலூர் மாவட்ட சங்கத்தை மாநில சங்கம் பாராட்டுகிறது
அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு தீர்மானத்தின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தை தோழர் பன்னீர்செல்வம் மாவட்ட செயலாளர் சிறப்புரை ஏற்பாடு செய்திருந்தார் தோழர் பாலசுப்பிரமணியன் மாநில பொறுப்பாளர் கண்டன உரை நிகழ்த்தினார் மாநில சங்க அறைகூவல் நிறைவேற்றிய தூத்துக்குடி மாவட்ட சங்கத்தை மாநிலச் சங்கம் வாழ்த்துகிறது .
Edit
ஏன் இந்த பட்டினிப் போராட்டம் என்பதை விளக்கும் தகவல் அறிக்கை இதைப் படிப்போர் போராட்டத்தில் நம் பங்கை செலுத்துவோம் போராடுவோம். இன்றைய நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராடும் ஒரு சங்கமாக நமதுசங்கம் மட்டுமே இயங்கி வருகிறது என்பது மிகையாகாது போராடுவோம் வெற்றி பெறுவோம் போராட்டம் இல்லாமல் யார் ஆட்டமும் செல்லாது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
618 ஓட்டு வித்தியாசத்தில் மீண்டும் NFTE தன் முதல் இடத்தை தக்கவைத்தது . தமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் ப...