புதன், 21 நவம்பர், 2018

பிரச்சினையின் தீர்வு இருக்கட்டும் ஒருபுறம் 

எந்த பிரச்சனைக்கு ஆவது நாம் இப்படி இறங்கி வேலை செய்கிறோமா ? என்பதை அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் யோசிக்க வைத்த இன்றைய நிகழ்வு அதுதான் நமது பொதுச் செயலாளர் தோழர் சி கே மதிவாணன் இன்று செய்த செயல் .
புயலால் பாதிக்கப் பட்டிருக்கும் திருவாரூர் தஞ்சை தூத்துக்குடி அறந்தாங்கி சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மல்லி செக்யூரிட்டி ஒப்பந்ததாரர் சம்பளம் வழங்காததை தமிழ்நாடு சங்கத்தின் சார்பாக நமது பொதுச் செயலாளரிடம் வருத்தத்தை பதிவு செய்தேன் தோழர் சிறிதளவும் யோசிக்காமல் நான் நேரடியாக சென்று அந்த ஒப்பந்ததாரரை சந்தித்து சம்பள பிரச்சனைக்கு ஒரு தீர்வு ஏற்படுத்துகிறேன் என்றார் கேட்கவே வியப்பாக இருந்தது சிறிது நேரத்தில் அவர் முகநூலில் போட்டிருக்கும் பதிவை கண்டவுடன் அகம் மகிழ்ந்தேன் இன்று தொழிற்சங்கம் நடத்த தெரியாத தலைவர்களும் , நாங்களும் தொழிற்சங்கம் வைத்துக் கொண்டிருக்கிறோம் என்று பெயரளவில் நடத்திக்கொண்டிருக்கும் தொழிற்சங்கவாதிகள் என்று ஏமாற்றும் தலைவர்கள் மத்தியில் இன்று நமது தோழர் செய்த செயல் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரின் மனதிலும் ஒரு நம்பிக்கையை உண்டாக்கி இருக்கிறது.தான் கொண்ட கொள்கையும் தான் நடந்து செல்லும் பாதையும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒரு உயர்வை ஏற்படுத்த வேண்டுமென்று இயங்கிக் கொண்டிருக்கும் தோழர் சி கே மதிவாணன் அவர்களுக்கு தமிழ்நாடு மாநில சங்கத்தின் சார்பாக மனதார வாழ்த்துகிறோம் நன்றிகள் பல ....
Image may contain: 1 person, standing

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக