22-11-2018 அனைத்து மாவட்ட தலைநகரங்களில் NFTCL அறிவித்த ஆர்ப்பாட்டம் ரத்து ..: மாதந்தோறும் சம்பளம் BSNL ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஏழாந்தேதி வழங்கப்படாமல் இழுத்தடிக்கும் போக்கினை கண்டித்து நமது மாநிலச் சங்கம் 22-11-2018 ல் ஆர்பாட்டத்திற்கு அறைகூவல் விடுத்தது. இதனைத் தொடர்ந்து நமது சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.கே.எம். இன்று இப்பிரச்சினையில் தலையிட்டு சுமூக தீர்வுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.நாளை கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைக்கும் சூழல் உள்ளது.எனவே நமது மாநிலச் சங்கம் திட்டமிட்ட 22-11-18 ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்ய தீர்மானித்துள்ளது. உடனடியாக தலையிட்டு பிரச்சினை தீர்வுக்கு உதவிய தோழர் சி.கே.எம்.அவரகளுக்கு
.
நமது நன்றி!!! நன்றி!!! நன்றி!!!.....
தோழமை அன்புடன்
எஸ்.ஆனந்தன்
மாநிலச் செயலாளர்
NFTCL, தமிழ்நாடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக