போராட தயாராவோம் அன்பார்ந்த தோழர்களே !!!தோழியர்களே !!! அக்டோபர் மாத சம்பளம் 20 தேதி ஆகியும் நமது கையில் கிடைக்காத நிலையே நிலவுகிறது இதனை கண்டித்து பலமுறை நிர்வாகத்திடமும் ஒப்பந்ததாரரிடம் பேசி பயன் இல்லாத காரணத்தால் வருகின்ற 22 11 2018 அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று மாநில சங்கத்தால் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் அனைத்து தலைநகரங்களில் மாநில நிர்வாகத்தை கண்டித்தும் ஒப்பந்ததாரர்களை கண்டித்தோம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திட மாநில சங்கம் கேட்டுக்கொள்ளப்படுகிறது போராடுவது புதிதல்ல!!!பிரச்சனைகளும் புதிதல்ல !!!புதியது என்னவென்றால் மாத சம்பளம் பிரதி மாதம் 7ஆம் தேதி கிடைப்பதுதான் !!!அதை பெற வலுவான போராட்டங்கள் மட்டுமே வழிவகை செய்யும் அதற்கான களத்தில் அனைவரும் ஒன்றிணைந்து நிற்போம் போராடுவோம் வெற்றி பெறுவோம் வாழ்த்துக்களுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக