புதன், 31 ஜனவரி, 2018

                    தொடரும் போராட்டம்…                   
 BSNL  நிறுவனம் ஒரு பொது துறை  நிறுவனம் என்று தான்  பெயர். ஆனால்  எந்தவித  பொதுத்துறைக்கான  சலுகைகளும் நிராகரிக்க படுகின்றன  என்பதுதான் உண்மை . வேண்டுமென்றே இந்த நிறுவனத்தையும் அதில் பணிபுரியும் தொழிலாளிகளை  பழிவாங்கும்  அரசாங்கமாக  இந்த மத்திய அரசாங்கம் இருக்கிறது . கடந்த  மூன்று நாட்களாய்  சத்தியாகிரக  அறவழி போராட்டம் என்று அறிவித்து போராடும்  ஊழியர்களை கண்டுகொள்ளாத  அரசாங்கமாய்  இந்த பிஜேபி  அரசாங்கம்  இருப்பது இந்திய நாட்டின் சாபக்கேடு .  சத்தியாகிரகம் செய்த  காந்தியடிகளை  மதித்து மரியாதையை செய்தது அன்றைய வேறுநாட்டு ஆங்கிலேய அரசாங்கம். ஆனால் இன்று இந்தியனையே  இந்தியன்  ஏளனமாய்  பார்ப்பது  நாட்டிற்கும் அவர்கள் ஆட்சிக்கு  நல்லதல்ல என்று  BSNL-லில் பணிபுரியும்  ஊழியர்கள் ,அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் என்று அனைவரும் ஓரணியில் நின்று பாடம் கற்பிப்போம் கூடிய விரைவில் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக