புதன், 9 ஆகஸ்ட், 2017

மாமல்லபுரம் மாநில செயற்குழு 

06/08/2017 அன்று மாமல்லபுரத்தில் NFTCL தமிழக மாநில செயற்குழு மாநிலத்தலைவர் தோழர்.பாபு அவர்கள் தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது. தோழர்.அசோகராஜன் அவர்கள் துவக்கவுரையாற்றினார். பொதுச்செயலர் தோழர்.மதிவாணன் அவர்கள் எழுச்சியுரையாற்றினார். மாநிலச்செயலர் தோழர்.ஆனந்தன் நெல்லை மாநில செயற்குழுவிற்குப்பின் நடைபெற்ற நிகழ்வுகளை, இயக்கங்களை, போராட்டங்களை, பிரச்சினைகளின் தீர்வுகளை அறிக்கையாக தந்து உரையாற்றினார். மாநிலச்சங்க நிர்வாகிகளும், மாவட்டச்செயலர்களும் உரையாற்றினர். திறனுக்கேற்ற கூலி கொடுக்கப்பட வேண்டும் என NFTCL தொடர்ந்து போராடி வெற்றி கண்ட விதம் தோழர்களால் பெருமையோடு நினைவு கூறப்பட்டது. மாநில செயல்தலைவர் தோழர்.மாரி நன்றி கூற கூட்டம் இனிதே முடிவுற்றது. மாநில செயற்குழுவை திறம்பட நடத்திக்காட்டிய NFTE மாவட்டச்செயலர் தோழர்.ஏகாம்பரம்,  NFTCL மாவட்டச்செயலர் தோழர்.மகேந்திரன் ஆகியோர் தலைமையிலான குழுவிற்கு நமது பாராட்டுக்கள்.

செயற்குழு தீர்மானங்கள்
  •  ஒப்பந்த ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ரூ.7000 போனஸ் வழங்க வேண்டும்.
  • ஊதியத்துடன் கூடிய வார ஓய்வு அளிக்கப்பட வேண்டும்.
  • திறனுக்கேற்ற கூலி 19/01/2017 முதல் உயர்த்தப்பட்ட கூலியின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி…
02/10/2017 அண்ணல் காந்தி பிறந்த தினத்தன்று…
திருச்சியில் சிறப்பு கோரிக்கை மாநாடு..

தோழர்களே… அணி திரள்வீர்… 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக