வீழ்ந்து விட்டோம்... விழாக்களில்...
இந்த மாதம் வைப்பு நிதி வரவேயில்லை.
வைப்பு நிதி ஏன் பட்டுவாடா செய்யப்படவில்லை?
இந்தப்பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு என்ன?
யாருக்கும் வெட்கமில்லை... யாருக்கும் கவலையுமில்லை...
DELOITTE குழு பரிந்துரைகளை
தமிழகத்தில் அமுல்படுத்த விடமாட்டோம் என்று சொல்லப்பட்டது.
முதற்கட்டமாக 4 மாவட்டங்கள் இரண்டு வணிகப்பகுதிகளாக பிரிக்கப்பட்டு தமிழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதைப்பற்றி எந்த வித கருத்தும் இல்லை...
சம்பந்தப்பட்ட மாவட்டங்கள் கூட குரல் எழுப்பவில்லை.
புதிய இணைப்புகள் கொடுக்க வகையற்ற இடங்களில்
TECHNICALLY NOT FEASIBLE இடங்களில்...
புதிய இணைப்புக்கள் கொடுக்கும் பணியை
குத்தகை மூலம் தனியாருக்கு கொடுக்க நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. இந்த இணைப்புக்கள் மூலம் கிடைக்கும்
வருமானத்தில் 35 சதம் தனியாருக்கு வழங்கப்படுமாம்.
இதைப்பற்றியும் தமிழ் மாநிலச்சங்கத்தில்...
எந்தவித கருத்தும் இல்லை. கவலையுமில்லை.
ஆனால் விழாக்கள் மட்டும்...
விறுவிறுப்பாகக் கொண்டாடப்படுகின்றன...
தனி நபர்கள் தலை மேல் வைத்து கூத்தாடப்படுகிறார்கள்..
தவிக்கும் தொழிலாளர்களோ பந்தாடப்படுகிறார்கள்...
மாநில மாநாடுகள்... மாவட்ட மாநாடுகள்...
கிளை மாநாடுகள்... சிறப்புக்கூட்டங்கள்...
பாராட்டு விழாக்கள்...கருத்தரங்கங்கள்...
பொன்விழாக்கள்... வைரவிழாக்கள்...
தங்க விழாக்கள்... தகர விழாக்கள்...
முப்பெரும் விழாக்கள்... நாப்பெரும் விழாக்கள்...
என விழாக்கள் வட்டம் கட்டி கொண்டாடப்படுகின்றன...
தொழிலாளர் பிரச்சினையோ கட்டம் கட்டப்படுகிறது...
மாநில மாநாடுகளில் கூட...
ஊழியர் பிரச்சினையைப் பற்றி பேச இயலவில்லை... நேரமில்லை...
நமது நிலைமையையும்...
தலைமையையும் எண்ணிப்பார்க்கும் போது....
கூட்டத்திற் கூடிநின்று
கூவிப் பிதற்ற லன்றி,
நாட்டத்திற் கொள்ளாரடீ!- கிளியே!
நாளில் மறப்பாரடீ!
இவர் வாய்சொல்லில் வீரரடி.. கிளியே..
என்ற பாரதியின் வரிகளே நினைவுக்கு வருகிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக