திங்கள், 26 செப்டம்பர், 2016


              23/09/2016 -மாநில செயற்குழு

23/09/2016 அன்று நமது மாநில செயற்குழு கூட்டம் AITUC மாநில சங்க அலுவலகத்தில் நடந்தது . இதில் நமது மாநில தலைவர் தோழர் .மாலி தலைமை தாங்கினார் .துவக்கமே அருமையான உரை . தோழர் . தங்கமணி ,மாநில துணை தலைவர் அஞ்சலியுரை நிகழ்த்தினார் . துவக்கயுறை அகில இந்திய சம்மேளன  செயலர் தோழர் .G.ஜெயராமன்  நிகழ்த்தினார்.
மாநில செயலர் தோழர் S.ஆனந்தன்  வரவேற்புரையாற்றினார் . பின்பு செயல்பட்டறிக்கை விவாதத்திற்கு வைக்கப்பட்டது .வாழ்த்துரையாக தோழர்.J. லக்ஷ்மணன்  AITUC மாநில செயலர்  மாநிலத்தில் நடந்து கொண்டிருக்கும் பல்வேறு நிகழ்வுகளை பற்றியும் விளக்கினார் .நமது அகில இந்திய பொது செயலர் தோழர் .C .K .மதிவாணன் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் தனது அறிக்கையில் பல்வேறு நிகழ்வுகளை பற்றியும் நமது சங்கம் அகில இந்திய மட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் துவங்கி இருப்பதை பற்றியும் ,BSNL-EU சங்கம் ஒப்பந்த தொழிலாளர் பிரச்சனையில் ஏமாற்று வேலைகள் மட்டும் தான் செய்து வருகிறது என்றும் போராட்ட பாதையில் நம் சங்கம் எடுத்துள்ள பிரச்சனைகள் பற்றியும் சிறப்புரை நிகழ்த்தினார். கரையில் களைத்து நம்மோடு இணைத்த தோழர் .மாரியும், முருகனும் பேசுகையில் மேடை போட்டு ,விழா நடத்தி கலைகின்ற கூட்டமாய் யார் இருந்தாலும் குற்றம்! குற்றமே !!! என்று தொழிலாளி வர்கம் அனைத்து விதமான அடக்குமுறை ,உழைப்பு சுரண்டல் மற்றும் வயற்றில் அடிக்கும் முதலாளிகளின் கையில் சிக்கி தவிக்கும் நிலைப்பற்றியும், அவர்களை காக்க NFTCL சங்கம் மட்டுமே தொடர்ச்சியாக போராடுவதை பார்த்துதான் நாங்கள் இணைத்தோம் என்ற வார்த்தைகள் புதிய ஒலி பிறக்க செய்தது.
 நல்ல உணவு ஏற்பாடு செய்த சென்னை தோழர்களை நமது மாநில சங்கம் மனதார வாழ்த்துகிறது . வாழ்த்துரையாக தோழர்கள் கடலூர் அன்பழகன் ,புதுவை அசோக்ராஜன், கோவை மாவட்ட செயலர் மற்றும் NFTE மணிலா பொருளாளர்  சுப்பாராயன் ,திருச்சி NFTCL மாவட்ட செயலர் மில்டன்  நமது BSNL சொசைட்டி துணை தலைவர் சி.கே.ரகுநாதன் ,நமது பொருளாளர்  அகில இந்திய சிறப்பு அழைப்பாளர்  தோழர். இளங்கோவன் -சென்னை
தோழர் தருமன் ,நமது மாநில பொருளாளர்  பாபு நன்றி கூறி செயற்குழு கூட்டத்தை முடித்து வைத்தார் .
















 











.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக