போராடாமல் வென்றதில்லை!போராடி நாம் !!தோற்றதில்லை !!!
நமது மாநில சங்கத்தின் சார்பாக 20/11/2015 அன்று முதல் நடக்கவிருந்த தொடர் வேலை நிறுத்தம் முத்தரப்பு பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தற்காலிகமாக நிறுத்திவைக்கபட்டுள்ளது . நமது கோரிக்கையின் நியாத்தையும் ,உணர்வையும் புரிந்து கொண்ட தொழிலாளர் நல ஆணையர் விடுத்த அவசர கூட்டத்திற்கு நமது சங்கத்தின் சார்பாக நமது மாநிலசெயலர் S .ஆனந்தன் ,மாநில பொருளாளர் Y . பாபு , கடலூர் மாவட்ட துணை செயளர் ரவி ,ஒப்பந்த தொழிலாளர்கள் பழனி மற்றும் ரூபன் தாஸ் மற்றும் நமது மாநில நிர்வாகத்தின் சார்பாக தமிழ் மாநில DGM (Admin ) M .ரவி அவர்களும் மற்றும் சென்னை தொலைபேசி மாநிலத்தின் DGM (Admin ) திருமதி R .உமா அவர்களும் பங்கேற்றனர் . சிறப்பான விவாதம், நிறைய கருத்து பரிமாற்றம் முடிவில் Regional Labour Commissioner (C ) அவர்கள்
ஒப்பந்த விதிகளை மீறும் ஒப்பந்ததாரர்கள் பட்டியலை இரு மாநில நிர்வாகங்களுக்கும்தொழிற்சங்கம் (NFTCL ) அளிக்க வேண்டும். அதனடிப்படையில் இரு மாநிலநிர்வாகம் நடவடிக்கை எடுத்து ,.இருவாரங்களுக்குள் பதிலளீ க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். நம்மையும் வேலை நிருத்த அறிவிப்பை நிறுத்திவைக்குமாறு கேட்டுக் கொண்டார் .எனவே நாம் மேற்கொள்ளவிருந்தவேலைநிறுத்தம் தள்ளி வைக்க பட்டுள்ளது ....,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக