வியாழன், 19 நவம்பர், 2015


போராடாமல் வென்றதில்லை!போராடி நாம் !!தோற்றதில்லை !!!


நமது மாநில சங்கத்தின் சார்பாக 20/11/2015 அன்று முதல் நடக்கவிருந்த தொடர் வேலை நிறுத்தம் முத்தரப்பு பேச்சுவார்த்தையின்  அடிப்படையில் தற்காலிகமாக நிறுத்திவைக்கபட்டுள்ளது . நமது கோரிக்கையின் நியாத்தையும் ,உணர்வையும் புரிந்து கொண்ட  தொழிலாளர் நல ஆணையர் விடுத்த அவசர  கூட்டத்திற்கு நமது சங்கத்தின் சார்பாக நமது மாநிலசெயலர்  S .ஆனந்தன் ,மாநில பொருளாளர் Y . பாபு , கடலூர் மாவட்ட துணை செயளர் ரவி ,ஒப்பந்த தொழிலாளர்கள் பழனி  மற்றும் ரூபன் தாஸ் மற்றும்  நமது மாநில நிர்வாகத்தின் சார்பாக தமிழ் மாநில DGM (Admin ) M .ரவி அவர்களும் மற்றும் சென்னை தொலைபேசி மாநிலத்தின் DGM (Admin ) திருமதி R .உமா அவர்களும் பங்கேற்றனர் . சிறப்பான விவாதம், நிறைய கருத்து பரிமாற்றம் முடிவில் Regional Labour Commissioner (C ) அவர்கள் 

ஒப்பந்த விதிகளை மீறும்  ஒப்பந்ததாரர்கள்  பட்டியலை இரு மாநில நிர்வாகங்களுக்கும்தொழிற்சங்கம் (NFTCL ) அளிக்க வேண்டும். அதனடிப்படையில் இரு மாநில நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ,.இருவாரங்களுக்குள் பதிலளீ க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். நம்மையும் வேலை நிருத்த அறிவிப்பை நிறுத்திவைக்குமாறு கேட்டுக் கொண்டார் .எனவே நாம் மேற்கொள்ளவிருந்த வேலைநிறுத்தம் தள்ளி  வைக்க பட்டுள்ளது ....,






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக