செவ்வாய், 3 நவம்பர், 2015


ஒளரங்காபாத் மத்திய செயற்குழுவில் பேசிய நமது மாநிலச் செயலரின் பேச்சு :

நமது அகில இந்திய  செயலரின் ஒருமணி நேர அனல் தெரிக்கும் உரைவீச்சு:
1. போனஸ் பிரச்சனை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். முன்னதாக தேவைப்பட்டால் இதற்காக நாம் மட்டுமே போராட்டம் நடத்தினால் கூட தவறில்லை.. தமிழகத்தில் NFTCL தொழிலாளர் நலத்துறை செயலரை அணுகி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் பெற்றுத்தந்தது. அதேபோல நாமும் CLC ஐ அணுகி ரூ.800/- கோடிக்கு மேல் சென்ற நிதியாண்டில் லாபம் நமது துறை ஈட்டியதை சுட்டிக்காட்டி பெறவேண்டும். முன்னதாக DPE 2011 லேயே லாபத்துடன் இணைந்த போனஸை பொதுத்துறை நிறுவனங்களுக்கு அதன் லாப அடிப்படையில் பார்க்க வேண்டியதில்லை எனக் கூறியதை நினைவுகூறவேண்டும்.
2. மேற்கு வங்காளம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள அமைப்பு நிலை பிரச்சனைகள் எதிர்வரும் தேர்தலுக்கு முன் தீர்க்கப்பட வேண்டும்.
3. நமது வாக்கு வங்கியை அதிகரிக்க நம்மோடு ஒத்த கருத்தோடு வரும் சங்கங்கள் .SEWA and TEPU இவைகளை வரும் ஏழாவது அங்கீகாரத் தேர்தலில் கூட்டணியாக சேர்க்க வேண்டும்.
4. 01-10-2000 பிறகு வேலையில் சேர்ந்த புதிய தோழர்களின் பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்படவேண்டும்.
5. மூன்று வருடங்களாக அனைத்து மட்டங்களிலும் நடைபெறாத கவுன்சில் கூட்டங்கள் உடனடியாக கூட்டப்படவேண்டும்.
6.இப்போது இரண்டு சங்கங்கள் அங்கீகாரத்தை கணக்கில் கொண்டு கவுன்சில்களுக்கான அஜண்டா இரண்டு சங்க செயலர்கள் கையொப்பமிட்டு கொடுக்க வழிவகை செய்யவேண்டும். ஏனென்றால் பல இடங்களில் .BSNLEU தான் தணிக்கை அதிகாரி போல செயல்பட்டு அஜண்டா சமர்ப்பிக்கபடுகிறது.
7.சங்கம் என்ற மரத்தின் ஆணிவேராக கிளைப்பகுதிகள் கருதப்படவேண்டும் அதே போல கொல்கத்தா மற்றும் சென்னை டெரிடோரியல் சர்கிள் அந்தஸ்து தரப்பட வேண்டும்.
8.நம்மை பாதிக்கும் தனி டவர் கம்பெனி முயற்சி முறியடிக்கப்படவேண்டும்.இல்லையேல் அது நமது நிதிநிலையை மேலும் மோசமடையச் செய்து விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக