வியாழன், 5 நவம்பர், 2015

05/11/2015 எழுச்சிமிகு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் 

2014-2015 ஆண்டிற்கான போனஸ் மற்றும் தீபாவளி பண்டிகைக்கு முன் சம்பள பட்டுவாடா நடைபெற வேண்டும் என்ற கோரிக்கைகளை  வலியுறுத்தியும் ஒப்பந்த தொழிலாளர்களின் உ ரிமைகளுக்கும் ,சலுகைகளுக்கும் ஆன நீதி அரசர்  Dy .Cheif Labour Commissioner -13/10/2015 அன்று பிறப்பித்த உத்தரவை   நிறைவேற்ற கோரியும் பெருந்திரள் கடலூர் பொது மேலாளர் அலுவலகம் முன்பு  நடைபெற்றது .


இதில் 100 - க்கும் மேற்பட்ட  ஒப்பந்த தொழிலாளர்கள்  கலந்து கொண்டனர் . மாவட்ட தலைவர் .தோழர் .G .வேதாச்சலம் தலைமை ஏற்று , தோழர். E .விநாயகமூர்த்தி  கோஷம் எழுப்பிட ,அமைப்பு செயளர் தோழர் .M . மஞ்சினி வரவேற்று , தோழர் அன்பழகன் துவக்க உரையாற்றினார் . மாநில செயளர்  தோழர் .S .ஆனந்தன் கோரிக்கைகளை பற்றிய அறிமுக உரையாற்றினார் .


அகில இந்திய செயளர் தோழர் .G  .ஜெயராமன் நமது நிறுவனம் மற்றும் நமது மாவட்ட தோழமை சங்கங்களின் அவலங்கள் குறித்தும் சிறப்புரை நிகழ்த்தினர் .

AITUC மாவட்ட செயலரும் மற்றும் நமது சங்கதின் சட்ட ஆலோசகருமான  தோழர் M .சேகர் சட்ட ரீதியான அணுகுமுறை பற்றியும் நமது சங்கத்தின் வளர்ச்சி பற்றியும் எடுத்துரைத்தார் .

போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் பொழுதே நிர்வாகத்தில்  இருந்து  மகிழ்ச்சியான செய்தி  அறிவிக்கபட்டது .06/11/2015 அதாவது இன்று சம்பளத்தோடு  இணைந்த போனஸ் பட்டுவாடா  நடை பெரும்  என்ற தகவலோடு நிறைவுபெற்றது .


சுமார் 3 மணி நேரம் கால்கடுக்க நின்றது நமது சங்க தோழர் ,தோழியர்களுக்கு நன்றியுடன் , தீபாவளி நல்வாழ்த்துகள் !!!














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக