வியாழன், 3 ஏப்ரல், 2014


                            



BSNLEU செல்லப்பாவின் கோயபல்ஸ் பிரச்சாரத்தை
   நிராகரித்த சென்னை தொலைபேசி ஊழியர்கள் !!

  3-4-2014 அன்று சென்னை தொலைபேசி மாநிலத்திற்கான 68 RGB உறுப்பினர்களுக்கான தேர்தல்  நடைபெற்றது.

  இதில் NFTE கூட்டணியின்  37  வேட்பாளர்கள்  வென்று உள்ளனர் என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதன் மூலம் 8 இயக்குநர்கள் NFTE கூட்டணி சார்பாக வெல்லும் பிரகாசமான வாய்ப்பு உருவாகிவிட்டது என்பதோடு செல்லப்பாவின் பொய்ப் பிரசாரத்தை  சென்னை தொலைபேசி ஊழியர்கள் நிராகரித்து விட்டனர் என்பது மேலும் மகிழ்வைத் தருகிறது.  

 எங்கு ஊழல் நடந்தாலும் அதை துணிவுடன் எதிர்த்து போராடும் போராளி, அவரது பென்சனுக்கே ஆபத்து வந்த போதும் மனம் தளராமல் போராடிய தோழர் மதிவாணன்  அவர்கள் மீது அபாண்டமாக அவதூறை அள்ளி வீசிய சின்ன புத்திகார செல்லப்பாவின் பிரச்சாரத்திற்கும், BSNLEU  லட்சக்கணக்கில் பனத்தை வாரி இறைத்தபோதும் அதற்கு பலியாகாமல்  சென்னை தொலைபேசி ஊழியர்கள் NFTE கூட்டணியை வெற்றி பெறச் செய்துள்ளனர். இதனால் BSNLEU   கூட்டணி சென்னையில் ஒரு டைரக்டர் இடத்தை கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 கூட்டுறவு சொஸைட்டியின் ஆகப்பெறும் உறுப்பினர்கள் பலன் பெறும் வகையில் அடுக்குமாடி கட்டி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் செயலாற்றிய தற்போதைய  தலைவர் தோழர் 
எஸ். வீரராகவன் அவர்களை மீண்டும் சொஸைட்டி தலைவராக பொறுப்பு ஏற்க வைக்க வேண்டும்  என்ற NFTE கூட்டணியின் நிலையை 
சென்னை தொலைபேசி ஊழியர்கள் மனப்பூர்வமாக ஏற்று அங்கீகரித்துள்ளது மகிழ்வுக்கு உரியது  ஆகும். 

 அடுத்து  திருச்சியிலும் கோவையிலும் நடைபெற உள்ள தேர்தலிலும் இந்த வெற்றி  தொடரும் என்பதில் சந்தேகமில்லை.




எந்நாளும்  சிந்திப்போம் !! உறுப்பினர்  நலன் காக்க !! 


    சென்னை சங்க முழக்கம் சங்க நாதமாக ஒலித்தது ! 

கூட்டுறவு சங்க சிறப்பிதழ் அனைத்து உண்மைகளையும்  அருமையாய் வெளிக்கொணர்ந்தது. 

அனைத்து சொஸைட்டி உறுப்பினர்களையும் நமது கூட்டணியின் RGB வேட்பாளர்கள் சந்தித்து சங்க முழக்கத்தை கொடுத்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

  நிலத்தை உறுப்பினர்களுக்கு விற்று 40,000 ரூபாய் தருகிறோம் என்ற செல்லப்பாவின் வாக்குறுதி நிறைவேற்றவே முடியாதது, உறுப்பினர்களை ஏமாற்றி வாக்குகளை பெறும் கீழ்த்தரமான செயல் என்பதை அனைவரும் உணர்ந்து வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத கோவை மாவட்ட BSNLEU தவியாய் தவிக்கிறது.   

    விண்ணப்பித்த உறுப்பினர்களுக்கு சென்னை அடுக்கு மாடி வீடுகளை ஒதுக்கிய பின் அதில் வரும் லாபத்தில் கோவை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் நிலங்களை வாங்கி அடுக்கு மாடி கட்ட திட்டமிடுவோம். வழக்கம்போல தோழர் மதிவாணன் அவர்களை தாக்கி தனிப்பட்ட முறையில் தாக்கி நோட்டீஸ் வெளியிட்டு உள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

   CPM கட்சித் தலைவர்களே 2G ஸ்பெக்க்டரம் ஊழல் என்று  கூறும்போது, ஊழலே நடைபெறவில்லை, மதிவாணன் சொல்வது பொய் என்று ராஜா விசுவாசியான அபிமன்யூ செல்லப்பா கம்பெனி, ஊழலுக்கு எதிராக போராடும், தனது பென்சனுக்கு ஆபத்து வந்த போதும் அதற்கும் அஞ்சாமல் நின்ற தோழரைப்பற்றி பேசவே அருகதை  அற்றவர்கள்.

 சொஸைட்டியில் முறைகேடுகளை களைய, BSNLEU முன்னாள் மாநிலச் செயலர் தோழர் D.கோபாலகிருஷ்ணன் அவர்களை தலைவராகவும் தோழர் மதிவாணன் அவர்களை கன்வீனராகவும் கொண்ட சொஸைட்டி பாதுக்காப்புக்குழு  பாடுபட்டதை  மறந்து விட்டு உளறிக் கொட்டியுள்ளது கோவை BSNLEU.

  எந்த சவாலையும் சந்திக்க கோவை NFTE மாவட்ட தோழர்கள் தயாராக உள்ளனர்.





BSNLEU சங்க  செல்லப்பாவின்  மோசடி
வாக்குறுதி யின் பித்தலாட்டம்  அம்பலம் !
அரிதாரம்  கலை  கிறது ,ஆதாரம்  இதோ !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக