புதன், 30 ஏப்ரல், 2014

பாட்டாளி வர்க்க உணர்வை நெஞ்சில் ஏந்திய போராளி தோழர்.எம்.கைலாசம் அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா 27-04-14 அன்று  தஞ்சையில் கவிதாலயா அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

NFTE-BSNL தஞ்சை மாவட்டத் தலைவர் தோழர் எஸ்.பிரின்ஸ் தலைமையில் நடந்த இந்த விழாவில்,தோழர் கைலாசம் அவர்களின் நற்பண்புகள்,தோழமை உணர்வு,தடம்மாறாத கொள்கை உறுதி,மனிதநேயம் ஆகிய சிறப்புக்கள் தோழர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.

NFTE-BSNL  சம்மேளனச் செயலாளர் தோழர் 
கோவி. ஜெயராமன்   பங்கேற்று சிறப்பித்தார். AIBSNLOA சார்பில் தோழர்எஸ்.காமராஜ், 
NFTE -BSNL திருச்சி சார்பில்தோழர்எம்.பாலகுரு, மாவட்டச்  செயலாளர் எஸ்.பழனியப்பன்,
தஞ்சை NFTE-BSNL மாவட்ட செயலாளர் தோழர் T.பன்னிர்செல்வம்,மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் பாராட்டு உரை வழங்கினர்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக