சனி, 10 ஆகஸ்ட், 2019

வருந்துகிறோம்.

NFTE- BSNL சம்மேளனத்தின் முன்னாள் Secretary General என்.டி. சஜ்வானி இன்று(29-06-2019) போபாலில் காலமானார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒருங்கிணைந்த மத்திய பிரதேச மாநிலத்தின் NFTE-BSNL மாநிலச் செயலாளராக பல ஆண்டுகள் செயல்பட்ட மூத்த தலைவரான அவரது மறைவுக்கு நமது ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.

கோஹ்லி ஆகியோரும் பொதுச் செயலாளர் பொறுப்பேற்க போட்டிக்கு தயாராயினர். நெருக்கடியான அந்த சூழலில் நான் துணிச்சலாக டில்லியில் நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில் தோழர் சஜ்வானியை பொதுச் செயலாளர் பொறுப்புக்கு முன்மொழிந்தேன். இந்த திருப்பத்தை எவரும் எதிர்ப்பார்க்கவில்லை. தோழர்கள் இஸ்லாம், கோஹ்லி ஆகியோரும் போட்டியில் இருந்து விலகிக் கொண்டனர். எனது சமயோசித முடிவால் சம்மேளனத்தின் ஒற்றுமை பாதுகாக்கப் பட்டதை இந்த கூட்டத்தில் நான் நினைவு கூர்ந்தேன். இருநுறுக்கும் மேற்பட்ட தோழர், தோழியர்கள் திரளாக வந்து மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
எனது போபால் வருகையை ஒட்டி NFTCL மாநிலச் செயலாளர் சலோட்கர் போபால் மாவட்ட ஒப்பந்த தொழிலாளர்களின் அவசர கூட்டம் ஒன்றுக்கு மதிய வேளையில் ஏற்பாடு செய்திருந்தார். அதில் பங்கேற்று பேசினேன். இன்றுள்ள நெருக்கடி சில மாதங்களில் நிச்சயமாக தீரும் என அவர்களிடம் எடுத்துரைத்தேன். மொத்தத்தில் போபால் பயணம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக