ஞாயிறு, 5 ஜனவரி, 2020

தமிழ்நாடு NFTCL மாநிலச் செயற்குழு முடிவுகள்:
30/12/19 ல் கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் கீழ்க்கண்ட அம்சங்கள் தீர்மானிக்கப்பட்டன.
1) ஒப்பந்த தொழிலாளர்களின் தாமதப் படுத்தப்பட்ட பத்து மாத ஊதியத்தை உடனடியாக வழங்கக்
கோரியும்- பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு ( ஆண்டுக்கு 240 நாட்கள் பணிபுரியும் பட்சத்தில்) வேலை செய்யும் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் நிர்வாகம் நிரந்தரமாக்கிட கோரியும்

* மாவட்ட தலைநகரங்களில் 2020 ஜனவரி 22 ல் கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டம்.
* தஞ்சாவூரில் 2020 ஜனவரி 29 ல் மாநிலந்தழுவிய தார்ணா போராட்டம்.
2) அடுத்த மாநில மாநாட்டை திருநெல்வேலியில் 2020 மே மாதத்தில் நடத்துவது. இதற்கான வரவேற்புக் குழு ஜனவரி மாத இறுதியில் அமைக்கப்படும்.
நிரந்தர ஊழியர்களுக்கும் , ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் பல மாத ஊதியம் கிட்டாத நெருக்கடியான சூழலில் - உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளான 30/12/2019 அன்று கோவையில் நடைபெற்ற இந்த மாநிலச் செயற்குழு கூட்டம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டம் சிறப்பாக அமைய நிதி திரட்டி ஏற்பாடுகளை செவ்வனே செய்த தலைவர்கள் சுப்பராயன், ராமகிருஷ்ணன், ஜெயச்சந்திரன் மற்றும் எண்ணற்ற தோழர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றி.



Image may contain: 5 people, including Babu Varadharaj, people smiling, people standing

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக