நமது தொலைத்தொடர்புத் துறையில் கடும் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகும் ஒப்பந்த ஊழியர்களை ஒன்று திரட்டி அவர்களது நியாயமான கோரிக்கைககளை வென்று அவர்களது வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற அருமைத் தோழர் C.K.மதிவாணன் அவர்களின் நற்சிந்தனையில் உருவானதே NFTCL. அந்த அமைப்பு இன்று இந்தியாவெங்கும் பரவி வருகிறது.
சமீபத்தில் திருச்சி தோழர் காமராஜ் மேற்கொண்ட ஏழைகளின் கல்விக்கு உதவும் நற்செயலை பார்த்தவுடன், ஆற்றல் இருந்தும் பணமில்லாததால் ஒப்பந்த ஊழியர்களின் குழந்தைகள் தங்களது படிப்பை தொடர முடியாமல் தவிக்கின்றனர். ஆகவே அவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு உதவ பாடுபடுவோம் என்ற தோழர் CKM அவர்களின் மேலும் ஓர் நற்சிந்தனையில்"மனிதகுல மாணிக்கம் கார்ல் மார்க்ஸ் அறக்கட்டளை "
உருவாகி உள்ளது. மாமேதை மார்க்ஸைப் போல கற்றாரும் இல்லை; கற்றதை உழைக்கும் வர்க்கம் மேம்பட எழுதியோரும் இல்லை.
அவர் பெயரில் லாப நோக்கமற்ற கல்வி அறக்கட்டளை என்பது சாலச் சிறந்தது. அதேபோல., உலகப் பொதுமறையை இயற்றிய வள்ளுவப் பெருந்தகையின்
" கற்க கசடற! நிற்க அதற்குத் தக "
என்ற உயரிய லட்சியத்தை நோக்கமாகக் கொண்டு செயலாற்ற துவங்கப்பட்டுள்ள அமைப்பின் பணி சிறக்க வாழ்த்தி உதவிக் கரத்தை நீட்டுவோம்!
பெருகும் நிதி. மனிதகுல மாணிக்கம் கார்ல் மார்க்ஸ் கல்வி அறக்கட்டளை அமைப்பதை அறிவித்த NFTCL பொதுச் செயலர் C.K.மதிவாணன், 25,000 ரூபாயை தான் நன்கொடையாக அளிப்பதாக அறிவித்தார்.
Retired DGM தோழர் சங்கிலி 11,000 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
தோழர் சுப்பராயன் ரூ.10,000 வழங்குவதாக அறிவித்தார்.
மேலும் பல தோழர்கள்
ரூ. 5000 வழங்கினர்.
ரூ. 5000 வழங்கினர்.
துவக்க நாளிலேயே நன்கொடை ரூ.1,00,000த்தை தாண்டியது.
மென்மேலும் நிதி பெருகிட மனமுவந்து நன்கொடை தாரீர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக