வியாழன், 22 மார்ச், 2018

நமது NFTE சங்கத்தின் 5வது அகில இந்திய மாநாடு 
மார்ச் 14..15..16.. தேதிகளில் பஞ்சாப் மாநிலம்
 அமிர்தசரஸ் நகரில் அற்புதமாய் நடந்தேறியது.

AITUC பொதுச்செயலர் தோழியர்.அமர்ஜித்கெளர் அவர்கள் 
மாநாட்டைத் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

 ஆயிரக்கணக்கான சார்பாளர்களும் பார்வையாளர்களும் கலந்து கொண்டனர். பொற்கோவில் நகரம் நமது சங்கத்தோழர்களால் புடைசூழப்பட்டது. புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநாடு ஒற்றுமையுடன் நடந்தேற 
தனது பங்கினை முழுமையாகச் செலுத்திய நமது NFTCL பொதுச்செயலர்
 தோழர்.மதிவாணன் அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

புதிய நிர்வாகிகள்
தலைவர் : தோழர்.இஸ்லாம் அகமது
பொதுச்செயலர்: தோழர்.சந்தேஷ்வர் சிங்
துணைப்பொதுச்செயலர் : தோழர்.சேஷாத்திரி
பொருளர் : தோழர்.ராஜ்மெளலி

சென்னைத்தொலைபேசியின் சார்பாக
துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நமது NFTCL பொதுச்செயலர்
தோழர்.C.K.மதிவாணன் அவர்களுக்கும்…

தமிழகத்தின் சார்பாக
துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
திருச்சித் தோழர்.பழனியப்பன் அவர்களுக்கும்..
செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட…
தோழர்.காமராஜ் அவர்களுக்கும்..

சிறப்பு அழைப்பாளர்…
கோவை தோழர்.செம்மல் அமுதம்
 அவர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக