மரமிறங்காத… மனமிறங்காத.. வேதாளங்கள்…
தோழர்களே…
மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிட்டது.
ஒப்பந்த ஊழியர்களுக்கு டிசம்பர்...ஜனவரி என
இரண்டு மாதங்களாக சம்பளம் தமிழகம் முழுவதும் பட்டுவாடா செய்யப்படவில்லை.
தங்களது பில்கள் பட்டுவாடா செய்யப்படாமல்… ஒப்பந்த ஊழியர்களுக்குச் சம்பளத்தைக் கொடுப்பதில்லை என ஒப்பந்தக்காரர்கள்… தெளிவாக… உறுதியாக உள்ளனர்.
அலைபேசியில் யார் கூப்பிட்டாலும்
பதில் தருவதேயில்லை.
தொழிலாளர் நலச்சட்டங்களை நடைமுறப்படுத்தாத மதிக்காத ஒப்ப்பந்தக்காரர்களை கறுப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று
தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கும்,
நமது இலாக்கா அதிகாரிகளுக்கும் புகார் அளித்துள்ளோம்.
ஒவ்வொரு ஒப்பந்தக்காரர்களும்…
உலகளந்த பெருமாள் போல்
வெவ்வேறு பெயர்களில் தசாவதாரம் எடுக்கின்றார்கள். எனவே கறுப்பு பட்டியலில் சேர்த்தாலும்
அவர்களுக்கு கவலை இல்லை.
இந்த இழிநிலை மாறவேண்டுமானால்
ஒப்பந்த முறை ஒழிய வேண்டும்.
ஒப்பந்த முறை ஒழியாத வரை
வேதாளங்கள்
மரமிறங்கப்போவதில்லை… மனமிரங்கப்போவதில்லை...
மாதாமாதம் வேதாளம்
மரத்தில் ஏறிக்கொண்டுதான் இருக்கும்.
இரண்டு மாதங்களாக சம்பளம் தமிழகம் முழுவதும் பட்டுவாடா செய்யப்படவில்லை.
தங்களது பில்கள் பட்டுவாடா செய்யப்படாமல்… ஒப்பந்த ஊழியர்களுக்குச் சம்பளத்தைக் கொடுப்பதில்லை என ஒப்பந்தக்காரர்கள்… தெளிவாக… உறுதியாக உள்ளனர்.
அலைபேசியில் யார் கூப்பிட்டாலும்
பதில் தருவதேயில்லை.
தொழிலாளர் நலச்சட்டங்களை நடைமுறப்படுத்தாத மதிக்காத ஒப்ப்பந்தக்காரர்களை கறுப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று
தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கும்,
நமது இலாக்கா அதிகாரிகளுக்கும் புகார் அளித்துள்ளோம்.
ஒவ்வொரு ஒப்பந்தக்காரர்களும்…
உலகளந்த பெருமாள் போல்
வெவ்வேறு பெயர்களில் தசாவதாரம் எடுக்கின்றார்கள். எனவே கறுப்பு பட்டியலில் சேர்த்தாலும்
அவர்களுக்கு கவலை இல்லை.
இந்த இழிநிலை மாறவேண்டுமானால்
ஒப்பந்த முறை ஒழிய வேண்டும்.
ஒப்பந்த முறை ஒழியாத வரை
வேதாளங்கள்
மரமிறங்கப்போவதில்லை… மனமிரங்கப்போவதில்லை...
மாதாமாதம் வேதாளம்
மரத்தில் ஏறிக்கொண்டுதான் இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக