வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

ஒப்பந்த ஊழியர் சம்பளம்தமிழகம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் டிசம்பர் 2017 மற்றும் ஜனவரி 2018 ஆகிய இரு மாதங்களுக்கான சம்பளம் ஒப்பந்த ஊழியர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. எப்போது வழங்கப்படும் என்ற உத்திரவாதமும் இல்லை. ஒப்பந்த ஊழியரைக் குறைக்கும் நடவடிக்கையில் இது ஒரு மறைமுக நடவடிக்கையாகவே தோன்றுகிறது. வேலை மட்டுமே வாங்குவோம்… சம்பளம் பற்றிப் பேசமாட்டோம் என்பது மனிதநேயத்திற்கு எதிரான செயல். தமிழ் மாநில நிர்வாகம் மனித நேயத்தில் மிகவும் பின்தங்கிப் போவது மிக மிக வருத்தத்திற்குரியது. தமிழ்மாநில நிர்வாகத்தை எதிர்த்து ஒப்பந்த ஊழியர்கள் போராட்டக்களம் காணாமல் அநீதி களைய முடியாது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக