வரலாறு
நமது மாநில சங்கம் சம வேலைக்கு சம ஊதியம் என்ற வழக்கை 21/04/2016 அன்று DCLC (சென்னைத் துணை முதன்மைத் தொழிலாளர் ஆணையர் ) அவர்களிடம் தொடர்ந்தது .இந்த வழக்கு உருவாக கடலூர் மாவட்டத்தில் நிகழந்த தவறான செயல்களே ! !! சங்கம் ஒன்றாய் இருக்கையில் கடலூர் மாவட்டத்தில் 30 நாள் சம்பளம் 26 நாளாக குறைக்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது . இதை எதிர்த்து நமது சங்கம் வலுவான போராட்டங்களை நடத்தியது அனைத்து தொழிற்சங்கம் உதவியோடு போராட்டம் 90 நாட்களை எட்டியது . சம்பளம் வாங்காமல் தொழிலாளி வேலை செய்துகொண்டே இருக்கின்றான் ,நிர்வாகம் திணறியது ஒன்று வேலையை நிறுத்துங்கள் அல்லது சம்பளம் பெற்று கொள்ளுங்கள் என்றது நிர்வாகம் ,ஆனால் தொழிலாளி சங்ககளுக்கு பின் நின்றான் . மெய்சிலிர்த்தது அனைத்து சங்கமும், இன்று ஒரு மாத வாடகை கொடுக்கவில்லை என்றால் வீட்டை காலி பண்ண சொல்லும் மனிதநேயம்தான் நிலவி வருகிறது .ஆனாலும் தொழிலாளியின் உணர்வை உணர்ந்த நமது தொழிற்சங்கம் தொழிலாளர் துறை துணை ஆணையர் (ALC ) முன் மூன்று முறை விவாதித்து அனைத்து தீர்ப்பும் பெற்றது ,இன்றும் எனக்கு அந்த போராட்டத்தில் பிடித்த விஷயம் BSNLEU மாவட்ட செயலர் ஒரு உத்தரவின் நகலை அவரிடம் கொடுக்கும் பொழுது எல்லோரும் வியக்கும் வண்ணம் ஒப்பந்த தொழிலாளிக்கு ஓன்று என்றால் துங்கமாட்டான் ஆனந்தன் என்று அனைவரின் முன்னாள் சொன்ன வார்த்தை ,இன்றும் நினைவிருக்கிறது .அனைத்து உத்தரவும் நமது தொழிற்சங்கதிற்கு ஏதுவாக அமைந்தது . ஆனாலும் கடலூர் மாவட்ட நிர்வாகம் எதனையும் ஏற்று கொள்ளவில்லை.
இறுதியாக வேறு வழியில்லாமல் ALC யே உயர்நிதிமன்றத்தை அணுகுங்கள் என்று கூறினார் . நமது சங்கம் வேறு விழியில்லாமல் உயர்நிதிமன்றத்தை அணுகுகியது எந்த தொழிசாங்கத்திற்கும் தெரியாது . காரணம் போராட்ட பாதையில் தேவையில்லாத போராட்டம். பாதையில் பல கிறுக்கல்கள் எல்லோரும் போராட்டத்தை கைவிட கோரிக்கை .நாம் ஓரிரு நாட்களில் சரி செய்யலாம் என்று கூறியும் ,அனைவரின் முன்னால் நாம் எதிராளியே !!! அனைவரும் வேறு நம் வழி வேறு என்றானது ஆதலால் உயர்நிதிமன்றத்தில் ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக