திங்கள், 12 ஜூன், 2017

சிவந்தது… சேப்பாக்கம்…
தோழர்.அசோக்ராஜ் துவக்கி வைத்து உரையாற்றுகிறார்..

தோழர்.மதிவாணன் ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கிறார் 
10/06/2017 – சென்னை சேப்பாக்கத்தில்…
காலையில் திரு.அய்யாக்கண்ணு அவர்கள் தலைமையில்
நாடு நலம் பெற உழைத்திடும் விவசாயிகளின் போராட்டம்….
மாலையில் தோழர்.மதிவாணன் அவர்கள் தலைமையில்…
BSNL நிறுவனம் வளர்ந்திட நாளும் உழைத்திடும்
ஒப்பந்த தொழிலாளர்களின் உணர்ச்சிமிகு போராட்டம்…

இந்த தேசத்தின் முதுகெலும்பான…
விவசாயிகளும்…. தொழிலாளர்களும்
வீதியில் இறங்கிப் போராடும் அவல நிலைதான்
இந்த தேசத்தை ஆளுகின்ற ஆட்சியாளர்களின் சாதனைகள்…

சென்னை சேப்பாக்கம் உச்சிப்பொழுதில் இருந்தே…
ஒப்பந்த ஊழியர்களால் உணர்ச்சி மேலிட ஆரம்பித்தது…

மாநிலத்தலைவர் தோழர்.பாபு தலைமையேற்க…
மாநில செயல்தலைவர்.தோழர்.மாரி வழிநடத்த…
அகில இந்திய உதவித்தலைவர் தோழர்.அசோக்ராஜ் துவக்கி வைக்க…
மாநிலச்செயலர் தோழர்.ஆனந்தன் விளக்கவுரையாற்ற…
தோழர்கள்.அன்பழகன், இராஜசேகரன்,
இளங்கோவன்,சுப்பராயன் ஆகியோர்
ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகளையும்
அதன் தீர்வில் NFTCL பங்கினையும் விவரிக்க…

பொதுச்செயலர் தோழர்.மதிவாணன் அவர்கள்
அரசியல் தெளித்த… அற்புத உரை நிகழ்த்த…
பத்திரிக்கையாளர்களும், தொலைக்காட்சியாளர்களும்…
தொழிலாளர்களின் கோரிக்கைகளைப் படம்பிடிக்க…

உணர்ச்சி மிகு முழக்கங்களோடு… 
உற்சாக மிகு பங்களிப்போடு…
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து
வந்த ஒப்பந்த ஊழியர்களின் பங்களிப்பில்
தர்ணா எழுச்சியோடு…முடிவுற்றது.

காரைக்குடி மாவட்டத்தில் இருந்து
40க்கும் மேற்பட்ட தோழர்களும்…
11 தோழியர்களும் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்…

ஒப்பந்த ஊழியரின் வாழ்வை மேம்படுத்துவதில்
NFTCL தொடர்ந்து முன் செல்லும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக