நோட்டீஸ் போர்டு சங்கம் அல்ல நமது சங்கம் அகிலஇந்திய முழுதும் பரவிக்கிடக்கும்....
சம் மேளனம் -NFTCL
ஒப்பந்த ஊழியர் விலைவாசிப்படி உயர்வு ஒப்பந்த ஊழியர்களுக்கான VDA விலைவாசிப்படி 01/04/2017 முதல் உயர்ந்துள்ளது.இதற்கான உத்திரவுஇன்று 20/04/2017முதன்மை தொழிலாளர் ஆணையரால்CLC வெளியிடப்பட்டுள்ளது.திறனற்ற தொழிலாளிகளுக்கு FOR UNSKILLED LABOUR A பிரிவு நகரத்தில் நாளொன்றுக்கு ரூ.13/=ம் B பிரிவு நகரத்தில் நாளொன்றுக்கு ரூ.11/=ம் C பிரிவு நகரத்தில் நாளொன்றுக்கு ரூ.9/=ம் விலைவாசிப்படி 01/04/2017 முதல் உயர்ந்துள்ளது. தற்போதைய சம்பளம் பிரிவு A நகரம் அடிப்படைச்சம்பளம் ரூ.523 விலைவாசிப்படி - ரூ.13 மொத்தச்சம்பளம் - ரூ. 536 பிரிவு B நகரம் அடிப்படைச்சம்பளம் ரூ.437 விலைவாசிப்படி - ரூ.11 மொத்தச்சம்பளம் - ரூ. 448 பிரிவு C நகரம் அடிப்படைச்சம்பளம் ரூ.350/= விலைவாசிப்படி - ரூ.9/= மொத்தச்சம்பளம் - ரூ. 359/= தற்போதைய விதிகளின்படி ஒப்பந்த ஊழியர்களுக்கு ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் மட்டுமே விலைவாசிப்படி வழங்கப்படும். புதிய சம்பளம் 19/01/2017ல் இருந்து நடைமுறைக்கு வந்தாலும் அவர்களுக்கு அன்றைய தேதியில் விலைவாசிப்படி உயர்வு இல்லை. எனவே 19/01/2017 முதல் 31/03/2017 வரை அடிப்படைச்சம்பளம் மட்டுமே பொருந்தும். 01/04/2017ல் இருந்ததுதான் விலைவாசிப்படி அமுலுக்கு வரும். ஆனால் மாநில நிர்வாகம் வழிமொழிந்த உத்திரவின் அடிப்படையில் சில இடங்களில் 19/01/2017 முதல் VDA சேர்த்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தவறாகும். CLCயின் 17/03/2017 உத்திரவின்படி VDA 01/04/2017 முதல் அமுலாகும் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. காரைக்குடி மாவட்டத்தில் நிர்வாகத்திடம் இதை ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்ததன் அடிப்படையில் மார்ச் மாத சம்பளம் புதிய 350 ரூபாய் அடிப்படையிலே வழங்கப்பட்டது. சில இணைய தளங்களும் 19/01/2017 முதல் VDA உயர்வு உண்டு என தவறுதலாக குறிப்பிட்டிருந்தன. எது எப்படியோ... நிரந்தர ஊழியர்களுக்கு விலைவாசிப்படி குறைந்தாலும்... அன்றாடக்கூலிகளான ஒப்பந்த ஊழியர்களுக்கு விலைவாசிப்படி உயர்ந்துள்ளது நமக்கு மிக்க மகிழ்ச்சியே…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக