செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

NFTCL-லில் பணி செய்வது 

நிறைவளிக்கிறது

நமது செயல் தலைவர்... 

AITUC – NFTCL கையெழுத்து இயக்கம்
Image may contain: 10 people, people standing
கையெழுத்து இயக்கத்தின் நோக்கங்கள் பற்றி
 எடுத்துரைக்கும் தோழர்.PLR மற்றும் தோழர்.இரவி 
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி
AITUC – NFTCL சார்பில் காரைக்குடியில்
26/02/2017 அன்று  பேரவைக்கூட்டம்
மிக எழுச்சியாக நடைபெற்றது.

AITUC துப்புரவுத்தொழிலாளர் சங்கத்தலைவர்
தோழர்.முருகன் தலைமையேற்றார்..
NFTCL மாவட்டத்தலைவர் தோழர்.முருகன்
NFTCL மாவட்டச்செயலர் தோழர்.முருகன்
NFTCL செயல்தலைவர் தோழர்.மாரி
NFTCL மாநில உதவிச்செயலர் தோழர்.மாரிமுத்து
NFTCL மாவட்டப்பொருளர் தோழர்.வீரசேகர்
AITUC போக்குவரத்து தலைவர் தோழர்.மணவழகன்
AITUC கட்டுமான சங்கத்தலைவர் தோழர்.சிவசாமி
AITUC பல்கலை ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தலைவர் தோழர்.சண்முகம்
AITUC உள்ளாட்சி துணைப்பொதுச்செயலர் தோழர்.PLR
ஆகிய தலைவர்கள் பங்கேற்க

AITUC துணைப்பொதுச்செயலர் தோழர்.இரவி சிறப்புரையாற்றினார்.
நூற்றுக்கணக்கான துப்புரவுத்தொழிலாளிகள் கலந்து கொண்டனர்
உட்கார இடமில்லாததால் இருக்கைகள் அகற்றப்பட்டு
தரையிலே தோழர்கள் அமர்ந்து தலைவர்கள் உரையைக் கேட்டனர்
கையெழுத்து இயக்கத்தை 
செய்து முடித்திட 30 குழுக்கள் அமைக்கப்பட்டன
குழு ஒருங்கிணைப்பாளராக தோழர். PLR செயல்படுவார்..
சிவகங்கை மாவட்டம் முழுமையும் 50000 கையெழுத்துக்கள் பெறவும்
ஏப்ரல் 11 கோட்டை நோக்கிய பேரணிக்கு 
1000 பேர் திரளவும் உற்சாகமுடன் முடிவு எடுக்கப்பட்டது

குப்பையாய்ப் போனவர்களின்.. 
பின்னால் சென்று நாமும்.. 
குப்பையாய் போவதை விட..
குப்பையை அள்ளும் அடிமட்ட 
ஊழியனுக்குப் பணி செய்வது சாலச்சிறந்தது...

ஆம்... தோழர்களே...
NFTEயில் பணி செய்வதை விட...
NFTCLலில் பணி செய்வது நிறைவளிக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக