வெள்ளி, 12 பிப்ரவரி, 2016



எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே !!!

ஏமாற்றும் இந்த சங்கங்களை இனியும்  நம்ப வேண்டுமா ? தோழர்களே  சிந்திப்பர்   ......,

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 26 நாள் சம்பளம் என்ற பிரச்சனை நமது கடலூர் மாவட்டத்தில் நிலவி வருவது அனைவரும் அறிந்த விஷயம் . 
அன்றைக்கும் நமது மாவட்ட சங்கம்தான்  உயர் நீதிமன்றம் அணுகி தடை ஆணை பெற்றோம் . அதனால் மட்டுமே கடந்த 3ஆண்டுகளாக நாம் 30 நாள் சம்பளம் பெறுவது அனைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் அறிந்ததே.
ஆனால் தீடிர் என்று மாவட்ட நிர்வாகம் பல பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது .  அந்த உத்தரவுகளை நிறைவேற்றினால் நமது மாவட்ட சங்கம்  வழக்கு தொடரும் என்ற வக்கீல் நோட்டீஸ் கொடுத்தோம் .மாவட்ட நிர்வாகமும் செவி சாய்த்தது.31 நாள் சம்பளம் அனைத்து ஒப்பந்ததாரரையும் கொடுக்க உத்தரவிட்டது.
மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி.ஆனால் ஒப்பந்த தொழிலாளர்கள்  நலனில் சிறிதும் அக்கறை இல்லாத தொழிற்சங்கங்கள் 16/02/2016 உண்ணாவிரத போராட்டம் நடத்த போகிறதாம் . நிர்வாகம் 26 நாள் சம்பளம்தான் வழங்க முடியும் என்று சொல்லும் பொழுது  எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காது .இன்று நாடகம் நடத்தும்....இந்த சங்கங்ககளை இனியும்  நம்ப வேண்டுமா ? 
தோழர்களே சிந்திபீர் !!!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக