.நாங்கள் தேச துரோகிகள்தான்.....,
.நீங்கள் நிறுவ நினைக்கும்
காவிதேசத்தின் தூரோகிகள்.
மூவாயிரம் ஆண்டுகளாய்
வாழ்ந்து வரும்
ஓர் இனத்தை
கருவறுத்து அதன்
சமாதியில் விளைச்சல்
செய்ய நினைக்கும்
நீங்கள் நிறுவும் தேசத்தின்
துரோகிகள்.
.
சாதியின் பெயரால்
அம்மனமாக்கி.
மலம் தின்ன வைக்கும்
நீங்கள் சொல்லும்
தேசத்தின் தூரோகிகள்
தான் நாங்கள்.
.
டாலர் கணக்கில்
ஆயில் பேரல்
விலை குறைந்தாலும்
விலையை குறைக்காமல்
எளியவர்களின்
வயிற்றில் அடித்து
முதலாளிகளின்
செருப்புகளை
நக்கிப் பிழைக்கும்
நீங்கள் சொல்லும்
தேசத்தின் துரோகிகள்தான்
நாங்கள்.
.
வெமுலாக்களும்,
இளவரசன்களும்,
கோகுல்ராஜுக்களும்,
இறந்து கொண்டே இருக்கும்
வரை எங்களின்-நீங்கள்
குறிப்பிடும் துரோகத்தின்
பட்டியல் நீண்டு
கொண்டே இருக்கும்.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக