வியாழன், 18 பிப்ரவரி, 2016


.நாங்கள் தேச துரோகிகள்தான்.....,

.
நீங்கள் நிறுவ நினைக்கும்
காவிதேசத்தின் தூரோகிகள்.
மூவாயிரம் ஆண்டுகளாய்
வாழ்ந்து வரும்
ஓர் இனத்தை
கருவறுத்து அதன்
சமாதியில் விளைச்சல்
செய்ய நினைக்கும்
நீங்கள் நிறுவும் தேசத்தின்
துரோகிகள்.
.
சாதியின் பெயரால்
அம்மனமாக்கி.
மலம் தின்ன வைக்கும்
நீங்கள் சொல்லும்
தேசத்தின் தூரோகிகள்
தான் நாங்கள்.
.
டாலர் கணக்கில்
ஆயில் பேரல்
விலை குறைந்தாலும்
விலையை குறைக்காமல்
எளியவர்களின்
வயிற்றில் அடித்து
முதலாளிகளின்
செருப்புகளை
நக்கிப் பிழைக்கும்
நீங்கள் சொல்லும்
தேசத்தின் துரோகிகள்தான்
நாங்கள்.
.
வெமுலாக்களும்,
இளவரசன்களும்,
கோகுல்ராஜுக்களும்,
இறந்து கொண்டே இருக்கும்
வரை எங்களின்-நீங்கள்
குறிப்பிடும் துரோகத்தின்
பட்டியல் நீண்டு
கொண்டே இருக்கும்.
.
AIYF strongly condemnig the illegal arrest of Kannaiah Kumar,JNUSU President on sedition case.AIYF NWC calls upon all its state dist units to go on protest against BJP Fascist Govt.We demand unconditional release of Kannhaiah Kumar.We request all left and democratic forces to extend support.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக