திங்கள், 26 அக்டோபர், 2015

பண்ருட்டிகிளையின்  -6 வது கிளை மாநாடு  


24-10-2015அன்று ராமசாமி செட்டியார் திருமண மண்டபத்தில் இனிதே நடைபெற்றது .இதில்  80- க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர் தோழர் S .S .D. பாஷா   சம்மேளனக் கொடியேற்றினார்.

கிளை  செயலர் தோழர் P .முருகன் மாநாட்டிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்தோழர் T.வடமலை அஞ்சலியுரை நிகழ்த்தினார்தோழர் P.சுந்தரமூர்த்தி முன்னாள் மாவட்ட செயலர்  துவக்கவுரை நிகழ்த்தினார்.

கிளைசெயலர் தோழர் P .முருகன் மற்றும் கிளை பொருளாளர் தோழர் A.சங்கர சுப்பு  ஆண்டறிக்கை மற்றும் நிதி நிலை அறிக்கையை சமர்ப்பித்தனர். இரண்டு அறிக்கைகளும் அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது

பெரும்பாண்மை உறுப்பினர்கள் நமது மாநாட்டில் கலந்து கொண்டது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது  .

மாநில அமைப்பு செயலர் தோழர் N .அன்பழகன் அவர்கள் முன்னிலையில்  நிர்வாகி தேர்வு நடைபெற்றது. இதில் அனைவரும் ஒருமனதாக  ஏற்றுக்  கொண்டபடி  புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

கிளைத்தலைவர்  தோழர்  S . உத்திராபதி 

கிளைசெயலர் தோழர்  .   P .முருகன் 

கிளை பொருளாளர்   தோழர் T.வடமலை 

ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை வாழ்த்தி நெய்வேலி கிளை செயலர் E.அப்துல்லா,விழுப்புரம் கிளை செயலர் G.கணேசன் ,கடலூர் தொலைபேசியக கிளைசெயலர் E. விநாயகமூர்த்தி ,திட்டக்குடி கிளை செயலர் P.M.K.D. பகத் சிங் மற்றும் முன்னாள் மாவட்ட பொருளாளர் M.மஞ்சினி மூத்த தோழர்கள் A.சுப்பரமனியன், முன்னாள்  துணை செயலர் , S .வீரமணி ,மற்றும் பாட்டாளி தொழிற்சங்க மாநில துணை செயலர் முருகன் ஆகியோர் உரையாற்றினர் .இறுதியாக மாநில அமைப்பு செயலர் தோழர் N .அன்பழகன்  மற்றும்   NFTCL மாநில செயலர் S.ஆனந்தன் அவர்கள் சங்க ஒற்றுமை தேவை பற்றியும், புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர்.












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக