திங்கள், 14 செப்டம்பர், 2015


தெலுங்கனா மாநில CPM உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் வாரங்கல் மக்களவைதொகுதி இடைத்தேர்தலில்உண்மையான புரட்சி கலைஞர் கத்தர் அவர்களை நிறுத்த ஆர்வமாக உள்ளனர். இந்தியாவின் மாபெரும் மக்கள் பாடகர்,தன் வாழ்நாள் முழுவதும் புரட்சிகரசமுக மாற்றத்துக்கு அர்ப்பணித்துகொண்ட போராளி,மனித உரிமைக்குபோராடும் நெஞ்சுரம் மிக்கதலைவர் கத்தர் கம்யூனிஸ்ட்கட்சிகளின் முடிவைஏற்று வாரங்களில் போட்டியிடவேண்டும்.பாசிச மதவெறி ஆட்சியில்,மனிதஉரிமைகளை காக்க,ஜனநாயகசீர்கேடுகளை உள்ளிருந்து அம்பலபடுத்த,ஒருபிரசார மேடையாக இந்த வாய்ப்பு பயன்படும்.சுரண்டலுக்கு-அடக்குமுறைக்கு-சாதி தீண்டாமைக்கு எதிராக ஒலித்தஉங்கள் கால்சலங்கைகள் நாடாளுமன்ற படிக்கட்டுகளிலும் ஒலிக்கட்டும்,ஆயிரம்ஆயிரம் லட்சம் என உழைக்கும் மக்களை சிலிர்க்கவைத்த உங்கள் போர்முழக்கம் டெல்லியில் எதிரொலிக்கட்டும் .







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக