திங்கள், 22 ஜூன், 2015

சிதம்பரம் கேபிள் பழுது நமது NFTCL சங்க தோழர்கள் சீரிய முயற்சியால் உடனடியாக சரி செய்யபட்டது .

சிதம்பரம் நகர பகுதியில் நகராட்சி கழிவு நீர் வாய்க்கால் தோண்டும் போது  நமது 1600 pair அளவுகொண்ட கேபிள் துண்டிக்கப்பட்டு பல தொலைபேசி இணைப்புகள் செயல் இழந்தன. நிர்வாகம் உடனடியாக சரிசெய்யும் பணியை துவங்கியது. சரி செய்யும் பணியில் (21-6-2015) ஞாயிறு விடுமுறை நாளென்றும் பாராமல் நமது சங்கத்தை சார்ந்த  ஒப்பந்த ஊழியர்கள் தோழர்கள் சத்யராஜ், மதி,நாகராஜன் ஆகிய மூன்று பேர் மற்றும் அந்த பகுதி டெலிகாம் மெக்கானிக் தோழர்.T.ராஜேந்திரன்  ஆகியோர்  கேபிள் ஜாயின்ட் பணியில் ஈடுபட்டு சரிசெய்தனர். இத் தோழர்களுக்கு நமது NFTCL மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள். 
  
இப்பகுதியில் கேபிள் பகுதியில் பணிபுரிவதற்கு ஏற்கனவே மேலும் சில ஒப்பந்த ஊழியர்களை நிர்வாகத்திடம் கோரியிருந்தோம். நிர்வாகம் நமது கோரிக்கையை ஏற்று கூடுதல் ஒப்பந்த ஊழியர்களை நியமிக்கும் பணியில் இருக்கிறது .


                                          
தோழர்கள் சத்யராஜ்,நாகராஜன் கேபிள் பணி செய்யும் போழுது ....
தோழர்கள் மதி ,சத்யராஜ்,நாகராஜன் கேபிள் பணி செய்யும் போழுது ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக