புதன், 11 பிப்ரவரி, 2015

குப்பை என்று நினைத்தீரா காரைக்குடியாரே?


அன்புத்தோழா காரைக்குடி மாரி அவர்களே!

     மற்றவர்களுக்கு மாண்பை போதிக்கும் தங்கள் அறிவுரைக்கு நன்றி,
ஆனால் மாற்று கருத்து கொண்ட தோழர்கள் நியாயம் வழங்கிடவேண்டும்
என கேட்பது தொழிற்சங்க நடைமுறை இல்லையா?,

    உங்கள் நொந்த உள்ளம் புரிகிறது,  ஆனாலும் ...  ஆனாலும்...

நீங்கள் எழுதிய வரிகள்:  
பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்து குப்பைகளை வெளியில் தள்ளிய கோபம் சொல்வதா?....
இந்த விமர்சனம்... 


நீங்கள் எங்கே இருந்து விமர்சிக்கின்றீர்கள் என்று நீங்கள் எழுதிய
வரிகளில் இருந்தே புரிகிறது, நீங்கள் நிதானமாக சிந்தித்து எழுதியதில் எனக்கு
சந்தேகமே!.

     எதிர் கருத்து கொண்டவர்களை,
நீங்கள் கூறிய ஏசுபிரானும்,
ஒப்பற்ற தலைவர் ஒ.பி.குப்தாவும்,
கண்ணின் மணியாக இயக்கத்தை வளர்த்த 
எங்கள் தோழன் ஜெகனும்,

கூறாததை கூறிவிட்டீர்கள்;

எங்களை குப்பை என்று!!!


நாங்கள் குப்பை அல்ல அள்ளி வீசுவதற்கு,குன்றென நீரூபிப்போம் விரைவில்.




         இதைத்தான், இதைத்தான் பட்டாபி ராமன் எதிர்பார்கின்றார்,
          வளருங்கள் உங்கள் குப்பை பிரச்சாரத்தை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக