செவ்வாய், 2 செப்டம்பர், 2014

ஈர்ப்பை ஏற்படுத்திய ஈரோடு பயிலரங்கம் !
சேலம் மாநில செயற்குழு முடிவின் அடிப்படையில் ஈரோட்டில் 2-9-14 அன்று நடைபெற்ற பணிக் குழு (Works Committee)பயிலரங்கம் சிறப்பாக அமைந்தது.

பணிக் குழுவை ஒரு சம்பிரதாயமான கூட்டமாக கருதாமல் BSNL நிறுவனம்  தரும் சேவைகளை மேம்படுத்த ஊழியர் தரப்புக்கும் நிர்வாக தரப்புக்கும் கிடைத்த ஒரு வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும் 
என்ற உந்துதலை ஏற்படுத்தி உள்ளது இப்பயிலரங்கம். 
தோழர் மாலி சங்கக் கொடியை ஏற்றினார்


ஈரோடு மாவட்டச் செயலர்
தோழர் பழனிவேலு அவர்களின் வரவேற்புரை

தோழர் மாலி அவர்களின் பொருள் 
       பொதிந்த  துவக்கவுரை


தோழர் குமார் அவர்களின் அறிமுகவுரை
Erode GM  delivering  Key note Address
மாநில துணைச் செயலர் தோழர் எல்.சுப்பராயன் அவர்களின் உரை

கோவை வொர்க்ஸ் கமிட்டி உறுப்பினர் , 
டாட்டாபேட் கிளைச்  செயலர்
தோழர் ஏ.சின்னதுரை அவர்களின் உரை


சம்மேளனச் செயலர் தோழர் கோ.ஜெயராமன் அவர்களின் சிறப்புரை

மாநிலச் செயலர் தோழர் ஆர்.பட்டாபிராமன்   அவர்களின் சிறப்புரை


      மாநிலப் பொருளர் தோழர் கே.அசோகராஜன்               அவர்களின்  நன்றி பாராட்டும் உரை

Monday, 1 September 2014




இணைந்தோரை வரவேற்கிறோம்
 இன்று எம்ப்ளாயீஸ் யூனியன் சங்கத்திலிருந்து தோழர்.சி.கே.மதிவாணன் முன்னிலையில் தம்மை நமது சங்கத்தில் இணைத்துக் கொண்ட தோழர்களை வருக வருக என வரவேற்கிறோம்.

                                                 From : Kanchi Web site

Saturday, 30 August 2014

   நெஞ்சுறுதியோடு ஜபல்பூர் நோக்கி பயணிப்போம் !

அகில இந்திய மாநாட்டை   வெற்றிகரமானதாக்கு வோம் !!

              அகில இந்திய சங்கம் அறை கூவல் !!

AIC at Jabalpur. Telecom Editorial September, 2014. (English & Hindi) Click Here

Friday, 29 August 2014



       உப்பு தின்றால் தண்ணீ ர் குடிக்க வேண்டும் !

                       


ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கியது தொடர்பான விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதிமாறன் மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
முன்னதாக நேற்று தயாநிதிமாறன்  உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் எச்.எல்.தட்டூ, எஸ்.ஏ.பாப்டே, ஏ.எம்.சாப்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை பரிசீலித்தது. அப்போது, தயாநிதி மாறன் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் அரிமா சுந்தரம் வாதிட்டதாவது:
ஏர்செல் -மேக்சிஸ் பேர வழக்கில், மலேசியாவில் சிபிஐ நடத்தி வரும் விசாரணை முடிக்கப்படாத நிலையில், இந்தியாவில் நடைபெற்ற விசாரணை அடிப்படையில் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளது. சட்டப்படி, விசாரணை முடிவடையாமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் கூடாது. எனவே, சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று வழக்குரைஞர் அரிமா சுந்தரம் கேட்டுக் கொண்டார்.
ஆனால், அவரது வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், "ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது என்பது சிபிஐயின் அதிகாரத்துக்கு உள்பட்ட நடவடிக்கையாகும். அதற்கு நீதிமன்றம் தடையாக இருக்காது. தயாநிதி மாறனுக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்யும் குற்றப்பத்திரிகை முழுமை பெறாமல் உள்ளதா, இல்லையா என்பதை முன்கூட்டியே எவ்வாறு கணிக்க முடியும்? முதலில் சிபிஐ குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யட்டும். அதன் பிறகு, அதில் குறைகள் இருந்தால் அது குறித்து நீதிமன்றத்தில் முறையிட மனுதாரருக்கு (தயாநிதி மாறன்) உரிமை உண்டு. எனவே, இந்த மனு மீது உத்தரவு பிறப்பிக்க இயலாது' என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்யும் முன்பே அதை திரும்பப் பெற்றுக் கொள்ள அனுமதிக்கும்படி வழக்குரைஞர் அரிமா சுந்தரம் கேட்டுக் கொண்டார். அதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.
இன்று தில்லி நீதிமன்றத்தில் மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல்லை விற்க கட்டாயப்படுத்தியதாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. சன் டைரக்ட் டி.வி., பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் குற்றவாளியாக குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு செப்.11ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Thursday, 28 August 2014

BSNL- ல்   Franchise -களின் உரிமைகள்?



    அகில இந்திய அளவில் நமது தயாரிப்புகளை விற்பனை செய்திட, விற்பனை உரிமை படைத்திட்ட ஃப்ரான்ஸிஸ்களை நியமித்துள்ளோம்.   


அவர்கள் நமது தயாரிப்புகளை பொதுமக்களிடம்  விநியோகம் செய்து அவர்களுக்கு உண்டான கமிசன் பெற்றுக்கொள்வது அவர்களது உரிமை.

 ஆனால் நமது தயாரிப்புகளை நமது CSC க்குள்  விற்பனை  செய்ய னுதிப்பது எப்படி ? 


எந்த தனியார் நிறுவனமும் அவர்களது  ஏஜெண்டுகளை  அவர்கள் SHOW ROOM களில் விற்பனை செய்திட அனு
திப்பார்களா ?    மாட்டார்கள் !

 ஆனால், விதிவிலக்காக நமது  BSNL நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை அவர்களது மார்கெட்டிங் பகுதியாக மாற்ற நாம்அனுமதிக்க முடியுமா?


  நமது வால்பாறை தொலைபேசி நிலைய வாடிக்கையாளர் சேவை மையத்தில் நமது ஃப்ரான்ஸைஸிக்காக ஒரு அறையை ஒதுக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து இன்று திறப்புவிழா என முடிவுஅறிவித்தது.  நமது வால்பாறை தோழர்கள் சங்க வித்தியாசம் இன்றி திரண்டு அதை எதிர்த்தனர்.


     நமது மாவட்ட சங்கம் தோழர்கள் ராமகிருஷ்ணன், பேரின்பராஜ் மற்றும் BSNLEU  மாவட்ட செயலர் தோழர் ராஜேந்திரன், சந்திரசேகரன், 
தனகோபால்உடன் இன்று  நமது துணை பொது மேலாளர் திரு ரத்தினசாமி அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினார், 

இறுதியில், நமது முதன்மை பொதுமேலாளர் திரு சிவராஜ் அவர்களின் ஆலோசனைபடி நமது  ஊழியர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, நமது ஃப்ரான்ஸிஸ்கள் மற்ற இடங்களில் உள்ளது போல தனியாக அமர்ந்து கொண்டு, நமது தயாரிப்புகளுக்கு உதவியாக உள்ள மோடம், டாடா கார்டுகள் மட்டும் விற்பனை செய்ய னுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது.


   நமது அலுவலகத்திற்குள்ளேயே, நமது தயாரிப்புகளை விற்பனை செய்ய அனுமதிப்பது என்பதுடன்,  அவர்களுக்கு தனியாக இடமும்  கொடுப்பது என்பது, கரு நாகத்தை  வீட்டிற்குள் அ
னுமதிப்பது போல் ஆகும்.


  ஊழியர்களின் உணர்வு வேகம் பொங்கி எழுகின்றது,


அதனால்,  விழிப்புடன் இருக்க வேண்டிய அகில இந்திய சங்கங்கள் வாய்மூடி மவுனியாக இருப்பதை கைவிட வேண்டும்.

 நிறுவனம் காக்க துயிலெல அனைத்து சங்கங்களும் முயல வேண்டும்,   

 சுவர் இருந்தால் மட்டுமே சித்திரம் எழுத முடியும்.


     இதுவே நமது விழைவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக