ஈர்ப்பை ஏற்படுத்திய ஈரோடு பயிலரங்கம் !
சேலம் மாநில செயற்குழு முடிவின் அடிப்படையில் ஈரோட்டில் 2-9-14 அன்று நடைபெற்ற பணிக் குழு (Works Committee)பயிலரங்கம் சிறப்பாக அமைந்தது.
பணிக் குழுவை ஒரு சம்பிரதாயமான கூட்டமாக கருதாமல் BSNL நிறுவனம் தரும் சேவைகளை மேம்படுத்த ஊழியர் தரப்புக்கும் நிர்வாக தரப்புக்கும் கிடைத்த ஒரு வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும்
என்ற உந்துதலை ஏற்படுத்தி உள்ளது இப்பயிலரங்கம்.
தோழர் மாலி சங்கக் கொடியை ஏற்றினார் |
ஈரோடு மாவட்டச் செயலர் தோழர் பழனிவேலு அவர்களின் வரவேற்புரை |
தோழர் மாலி அவர்களின் பொருள் |
பொதிந்த துவக்கவுரை
தோழர் குமார் அவர்களின் அறிமுகவுரை |
Erode GM delivering Key note Address |
மாநில துணைச் செயலர் தோழர் எல்.சுப்பராயன் அவர்களின் உரை |
கோவை வொர்க்ஸ் கமிட்டி உறுப்பினர் ,
டாட்டாபேட் கிளைச் செயலர்
தோழர் ஏ.சின்னதுரை அவர்களின் உரை
சம்மேளனச் செயலர் தோழர் கோ.ஜெயராமன் அவர்களின் சிறப்புரை |
மாநிலச் செயலர் தோழர் ஆர்.பட்டாபிராமன் அவர்களின் சிறப்புரை |
Monday, 1 September 2014
Saturday, 30 August 2014
நெஞ்சுறுதியோடு ஜபல்பூர் நோக்கி பயணிப்போம் !
அகில இந்திய மாநாட்டை வெற்றிகரமானதாக்கு வோம் !!
அகில இந்திய சங்கம் அறை கூவல் !!
AIC at Jabalpur. Telecom Editorial September, 2014. (English & Hindi) Click Here
அகில இந்திய மாநாட்டை வெற்றிகரமானதாக்கு வோம் !!
அகில இந்திய சங்கம் அறை கூவல் !!
AIC at Jabalpur. Telecom Editorial September, 2014. (English & Hindi) Click Here
Friday, 29 August 2014
உப்பு தின்றால் தண்ணீ ர் குடிக்க வேண்டும் !
ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின்
மேக்சிஸ் நிறுவனம் வாங்கியது தொடர்பான விவகாரத்தில் முன்னாள் மத்திய
அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதிமாறன் மீது மத்திய
புலனாய்வுத் துறை (சிபிஐ) இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
முன்னதாக நேற்று தயாநிதிமாறன் உச்ச
நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் எச்.எல்.தட்டூ,
எஸ்.ஏ.பாப்டே, ஏ.எம்.சாப்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை
பரிசீலித்தது. அப்போது, தயாநிதி மாறன் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் அரிமா
சுந்தரம் வாதிட்டதாவது:
ஏர்செல் -மேக்சிஸ் பேர வழக்கில், மலேசியாவில்
சிபிஐ நடத்தி வரும் விசாரணை முடிக்கப்படாத நிலையில், இந்தியாவில் நடைபெற்ற
விசாரணை அடிப்படையில் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது சிபிஐ
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளது. சட்டப்படி, விசாரணை
முடிவடையாமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் கூடாது. எனவே, சிபிஐ
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று வழக்குரைஞர்
அரிமா சுந்தரம் கேட்டுக் கொண்டார்.
ஆனால், அவரது வாதத்தை ஏற்க மறுத்த
நீதிபதிகள், "ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது என்பது
சிபிஐயின் அதிகாரத்துக்கு உள்பட்ட நடவடிக்கையாகும். அதற்கு நீதிமன்றம்
தடையாக இருக்காது. தயாநிதி மாறனுக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்யும்
குற்றப்பத்திரிகை முழுமை பெறாமல் உள்ளதா, இல்லையா என்பதை முன்கூட்டியே
எவ்வாறு கணிக்க முடியும்? முதலில் சிபிஐ குற்றப்பத்திரிகையைத் தாக்கல்
செய்யட்டும். அதன் பிறகு, அதில் குறைகள் இருந்தால் அது குறித்து
நீதிமன்றத்தில் முறையிட மனுதாரருக்கு (தயாநிதி மாறன்) உரிமை உண்டு. எனவே,
இந்த மனு மீது உத்தரவு பிறப்பிக்க இயலாது' என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, மனுவை நீதிபதிகள் தள்ளுபடி
செய்யும் முன்பே அதை திரும்பப் பெற்றுக் கொள்ள அனுமதிக்கும்படி வழக்குரைஞர்
அரிமா சுந்தரம் கேட்டுக் கொண்டார். அதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.
இன்று தில்லி நீதிமன்றத்தில் மலேசியாவின்
மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல்லை விற்க கட்டாயப்படுத்தியதாக முன்னாள்
மத்திய அமைச்சர் தயாநிதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த
குற்றப்பத்திரிகையில் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன்
உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரின் பெயர்களும்
சேர்க்கப்பட்டுள்ளன. சன் டைரக்ட் டி.வி., பிரைவேட் லிமிடெட் நிறுவனமும்
குற்றவாளியாக குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு
செப்.11ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
Thursday, 28 August 2014
BSNL- ல் Franchise -களின் உரிமைகள்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக