திங்கள், 31 மார்ச், 2014

செல்லப்பாவின் கேள்விகளுக்கு பதில்கள்
                      (ஆதாரத்துடன்)


செல்லப்பாவின் குற்றச்சாட்டு :
தோழர் மதிவாணன் Forum அமைப்புக்கு எதிரி ! 

டெல்லியில் Forum சார்பாக நடந்த கூட்டத்தில் NFTE-BSNL சார்பாக உரையாற்றுகிறார் தோழர் சி.கே.மதிவாணன். அவர் Forumக்கு எதிரி என்று எழுதியுள்ள செல்லப்பா இதே கூட்டத்தில் கலந்து கொண்டார். இதுவே அவரின் பொய் பிரச்சாரத்தை அம்பலமாக்குகிறது.  


செல்லப்பாவின் குற்றச்சாட்டு :
மதிவாணன் கமிஷன் பெறவே அடுக்கு மாடி திட்டத்தை உருவாக்கினார். 

அன்றிலிருந்து  இன்றுவரை தொடர்ந்து அநியாயத்தை எதிர்த்து போராடி வருபவர் தோழர் மதிவாணன். அவர் ஊழலுக்கு ஒத்துப்போவார் என்று சொன்னால், அதை சொல்பவருக்கு பித்தம் பிடித்து விட்டது என்று 
கேட்பவர் மனதில் நினைத்துக் கொள்வார்.  


 செல்லப்பாவின்கேள்வி : 
தமிழ் மாநிலச் செயலர் தோழர் பட்டாபி அவர்களுடன் அவர் ஒரே மேடையில் பேசாமல் இருப்பது ஏன் ? 

                      இந்த  படங்களே அதற்கு பதில்.

















                        இரட்டைக்குழல் துப்பாக்கியாய்......


 நமது கூட்டுறவு  சங்கத்தை BSNLEU சங்கத்தின் கைப்பாவையாய் மாற்ற பகல் கனவு காணும் செல்லப்பாவின் முயற்சியை சென்னை 
தொலைபேசி மற்றும் தமிழ் மாநில  NFTE,  FNTO SEWA BSNL, அண்ணா யூனியன் தோழர்கள்  இரட்டை குழல் துப்பாக்கியாய் இருந்து       
    முறியடிப்பார்கள் என்பது திண்ணம்.    


                   
         செல்லப்பாவின் கேவலமான தரம் !


அந்தோ பரிதாபம் மதிவாணன் என்று தலைப்பிட்டு  BSNLEU சென்னை மாநிலச் செயலர் கோவிந்தராஜனும், தமிழ் மாநிலச் செயலர் செல்லப்பாவும் ஒரு கூட்டு அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.  

அதில் மதிவாணன் அவர்களின் செயல்தன்மை பற்றி தவறாக சித்தரித்து உள்ளனர்.

  யார் தவறு செய்தாலும் தைரியமாக எடுத்துச் சொல்லும் குணம் படைத்தவர்தான் தோழர் மதிவாணன் என்பது யாவரும் அறிந்தே......

ஆனால் செல்லப்பா கம்பெனியின் பாரம்பரிய வழக்கம் என்ன ?

மதிப்புவாய்ந்த  நமது தலைவர்களை கீழ்க்கண்டவாறு தரக்குறைவாக எழுதிய செல்லப்பாவிற்கு  தரம் பற்றி பேசும் தகுதி உண்டா ?  

  
  அருமைத் தோழர் குப்தா அவர்களை  "அரசின் ஆசைநாயகன் " என்று தொலைத் தொடர்பு தோழன் இதழில் எழுதிய செல்லப்பாவின் முகவிலாசம் என்ன ?

  1995ல் அர்ச்சனா டெலிகாம் கம்பெனியிடம் அருமைத் தோழர் குப்தா 
 " சூட் கேஸ் வாங்கினார் " என்று நாக்கூசாமல் பேசியவர்தானே 
இந்த செல்லப்பா ?

உத்தமத் தலைவர் ஜெகன் அவர்களை BlackBelt ஜெகன்னாதன்  என்று வர்ணித்து நோட்டிஸ் போட்ட செல்லப்பாவிற்கு தோழர் மதி அவர்களைப் பற்றி எழுத அருகதை உண்டா ?

லைன் ஸ்டாப் சங்க அகில இந்திய பொதுச் செயலர் தோழர் சந்திரசேகர் காலமானவுடன் அந்த பொறுப்புக்கு தோழர் ஜெகன் தேர்ந்தெடுக்கப்
ப ட்டார்  .  அதை  தனது தொலைத் தொடர்பு தோழனில் கிண்டலாக , ஒரு இளைஞர் அந்த பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர் பார்த்தோம் ! கிடப்பதெல்லாம கிடக்கட்டும் கிழவியை கொண்டு வந்து மணையில் வை என்பது போல  வயதானவரை 2000த்தில் சிலிகுரியில் நடந்த செயற்குழுவில் பொதுச் செயலர் ஆக்கிவிட்டார்கள் என்று எழுதி, தோழர் ஜெகன் அவர்களை அவமதித்த செல்லப்பாவின் தரம் நாம் நன்கு அறிந்ததே ! 

ஆலவட்டம் போட்ட குன்னூர் அதிகார வர்க்கத்தை எதிர்த்து போர்ப்பரணி பாடிய தோழர் ஆர்.கே அவர்களை அட்டைக் கத்தி ஆர்.கே என்று எழுதியவர்தானே இந்த செல்லப்பா ?

 78.2 DA பற்றி உடன்பாடு போட்ட முதல் நாளன்று இரவு, நமது சங்கத் தலைவர் தோழர் இஸ்லாம் நிர்வாகத்திற்கு விலை போய்விட்டார் என்று நாடெங்கும் கிசுகிசுப் பிரச்சாரம் செய்ததுதானே செல்லப்பா வகையறா ! 

  ஆம் ஆத்மீ கெஜ்ரேவாலின் பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்ட BJP, அவரை தாக்குவது போல உள்ளது, நாடு போற்றும்  Whistleblower மதிவாணன் அவர்களின் துணிச்சலான செயல்பாட்டால் அஞ்சி நடுங்கும்  செல்லப்பா கோவிந்த ராஜன்  கம்பெனியின் , ஊழல் நடந்து விடும் என்ற குடுகுப்பைக் காரன்  துர்பிரச்சாரம். 

அப்படி பார்த்தால் எந்த பெரிய Projectஐயும் செய்ய முடியாதே ? அதை கண்காணிக்க அனைத்து மாநிலச் செயலர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் என்று அறிவித்த பின்னும் அதை ஏற்க மறுப்பது ஏன் ?


                         " Make Impossible Possible"
                                                          -Our legendary Leader O.P.Gupta 

 கார்ப்பரேஷன் ஆனால் அரசு பென்சன் கிடைகாது என்று பிரச்சாரம் செய்தது செல்லப்பா வகையறா. 

சாத்தியமில்லை என்பதை சாத்தியமாக்குவதுதான்  நமது பணி என்று சூழுரைத்து அதை சாதித்துக் காட்டியவர் பெருந்தகை O.P குப்தா . 


இன்று குப்தா பெற்றுக்கொடுத்த அதே அரசு பென்சனை அபிமன்யு, நம்பூதிரி, ராமன் குட்டி, D. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் அனுபவித்து வருவது போல, அடுக்கு மாடி கட்டிய பின் இதே செல்லப்பாவும் கோவிந்தராஜனும் எங்களுக்கும் ஒரு Flatஐ ஒதுக்கி தாருங்கள் என்று கேட்கப் போவது உறுதி. 

                                                                                                        S.ஆனந்தன் 
                                                                                                      மாநில செயலர் 
                                                                                                              NFTCL 
                                                                                                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக