அகில இந்திய துணைப்பொதுச்செயலர் தோழர் C.K. மதிவாணன் அவர்களின் உரையிலிருந்து...
24-3-14 அன்று கடலூரில் நடைபெற்ற NFTCL மாநிலசங்க நிர்வாகிகளுக்கு நடைபெற்ற
பாராட்டுவிழாவில் தோழர் C.K.மதிவாணன், துணைப்பொதுச்செயலர் அவர்கள் ஆற்றிய
உரையிலிருந்து ...
கூட்டுறவு சங்கத்திற்கான தேர்தல் நடைபெற்றுவருகிறது. இதில் NFTE சங்க தோழர்களை
தோற்கடிக்க வேண்டும் என்று BSNLEU சங்கம் கடுமையாக முயற்சித்துவருகிறது.
அது தனது தொலைதொடர்பு தோழன் இதழிலும், சுற்றறிக்கையிலும் BSNLEU சங்கத்திற்கு
வாக்களித்தால்தான், சொஸைட்டியில் ஊழல் நடக்காது என்று பொய்பிரச்சாரம்
நடத்திவருகிறது. பன்மாநில கூட்டுறவு சொஸட்டி 2002 -ம் ஆண்டு விதிகளுக்கு மாறாக, உறுப்பினர்களுக்கு
ரூ 40 ஆயிரம் பிரித்தளிப்போம் என் கோயபல்ஸ் பிரச்சாரம் செய்துவருகிறது. ஆகையால்
தமிழக NFTE சங்க தோழர்கள் ஒன்றுபட்டு, BSNLEU சங்கத்தின் துரோக பிரச்சாரத்தை முறியடித்து,
கூட்டுறவு சங்கத்தை ஒரு கட்சியில் கட்டுப்பாட்டில் போகக்கூடாது என பாடுபட்டு வருகின்றனர்.
ஆனால் நமது சங்கத்தினை தோற்கடிக்க நினைக்கும் BSNLEU சங்கத்துடன், ஸ்ரீதரன், மாவட்டசெயலர்
தலைமையில்
கடலூரிலும், தமிழ் மாநில சங்க நிர்வாகி தோழர் மனோகரன்
தலைமையில் திருச்சியிலும் BSNLEU சங்கத்துடன் கூட்டணி வைத்துள்ளனர்.
இது இயற்கைக்கு மாறான வினோதமாக உள்ளது. NFTE சங்கத்தோழர்கள் அனைவரும் ஒன்று பட்டு
நின்றாலே அனைத்து RGB உறுப்பினர்களும் சுலபமாக வெற்றியை அள்ள முடியும். இந்த பொன்னான
வாய்ப்பை நிராகரித்துவிட்டு, தேவையின்றி BSNLEU சங்கத்திற்கு சிலRGB பதவிகளை விட்டுகொடுத்தது,
நியாயமானது அல்ல, ஆகவே தோழர்கள் ஸ்ரீதரன், மனோகரன் போன்றோர் தங்களது NFTE சங்கத்தை
பிளவு படுத்தும் போக்கை கைவிட்டு ஒன்று படவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
மேலும்,
88 ஏக்கர் நிலத்தை BSNLEU சொல்வதுபோல வீட்டுமனைகளாக பிரித்து கொடுப்பதாக இருந்தால்கூட
சுமார் 1936 பேருக்கு மட்டுமே!!! 1/2 கிரவுண்டு நிலம் என்ற வகையில் மனைகள் கிடைக்கும்.1936 பேருக்கு கிடைக்கும் மனையின் லாபத்தில், சுமார் 20 ஆயிரம் பேருக்கு, தலா 40 ஆயிரம் ரூபாய்
எப்படி தர முடியும்.
ஆக மொத்த ரூ 80 கோடி லாபம், மற்றும் நிலத்தின் விலை ரூ 20 கோடி என சேர்த்து
பார்த்தால் ரூ 100 கோடி நிலத்தின் விலையாக வருகிறது.
இந்த விலையை,
நிலத்தை வாங்கபோகும் 1936 பேரின் தலையில் சுமத்தினால், ஒரு கிரவுண்டு நிலத்தின் விலை எத்தனை லட்சங்கள் என கணக்கிடுங்கள், என்ன தலை சுற்றுகிறதா...
எனவே,
ஊழியர்களை மோசடி செய்து ஏமாற்றி அங்கீகார தேர்தலில் வெற்றி பெறுவதைப்போல, கூட்டுறவு
சொஸைட்டியிலும் வெற்றி பெறலாம் என BSNLEU கூட்டணி கனவு காண்கிறது. இது பகல் கனவாகவே
முடியும்.
அனேகமாக, இவர்கள் சொல்லும் விலையை கேட்டு, 1/2 கிரவுண்டு மனைக்கு பதிலாக ரூ 40 ஆயிரம்
போதுமென்று உறுப்பினர்கள் பதறி ஓடுவதற்கும் வாய்ப்புள்ளது.
இந்த ஏமாற்று காரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக